ராதிகாவிற்கு எப்படி அனைத்து உண்மைகளும் தெரியவந்தது ? வசமாய் சிக்கிக்கொண்ட கோபி! ப்ரோமோ ரிலீஸ்!
பாக்கியா தான் கோபியின் மனைவி என்கிற உண்மையை குடிபோதையில் கோபியே ராதிகாவிடம் உளறிக் கொட்டுகிறார். பின்பு போதை தெளிந்ததும் அனைத்தையும் மறந்து விட்டு பழையபடி ராதிகாவிடம் வந்து கோபி திட்டு வாங்கும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் பாக்கியா தான் கோபியின் மனைவி என்கிற உண்மை ராதிகாவிற்கு தெரிய வருகிறது. அதாவது எப்போது கோபி வீட்டிற்கு வந்தாலும் ராதிகா கோபியிடம் உங்களது வீட்டிற்கு என்னை அழைத்துச் செல்லுங்கள் என கேட்டு அடம்பிடிக்கிறார். இதனால் கடுப்பான கோபி நன்றாக குடித்துவிட்டு ராதிகாவின் வீட்டிற்கு வருகிறார். என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் பாக்கியாவுடன் கோபி சேர்ந்து இருக்கும்படியான புகைப்படத்தை எடுத்து ராதிகாவிடம் காட்டுகிறார்.
Exams Daily Mobile App Download
பாக்கியா டீச்சர் தான் என்னுடைய மனைவி என கோபி ராதிகாவிடம் கூறுகிறார். அந்த புகைப்படத்தை பார்த்ததும் ராதிகாவுக்கு தூக்கிவாரிபோட்டது. இத்தனை நாட்களாக கோபியும் நம்மை ஏமாற்றி விட்டாரே என என ராதிகா கதறி அழுகிறார். பின்பு போதை தெளிந்ததும் இரவு ராதிகாவிடம் என்ன பேசினோம் என்கிற அனைத்தையுமே கோபி மறந்து விடுகிறார். பழையபடி ராதிகாவை பார்க்க ராதிகாவின் வீட்டிற்கு கோபி வருகிறார். மயூவுடன் கோபி பேசிக் கொண்டிருப்பதை பார்த்து ராதிகா பயங்கரமாக திட்டி விடுகிறார்.
மீண்டும் நடிகர் விஜய்க்கு ஜோடியாகும் நடிகை சமந்தா? தளபதி 67 அப்டேட்! ரசிகர்கள் உற்சாகம்!
எதற்காக ராதிகா திட்டுகிறார். மயூவுடன் தானே பேசிக்கொண்டிருந்தேன் எதற்காக இப்படி திட்ட வேண்டும் என கோபி நினைக்கிறார். நான் உங்களை எவ்வளவு நம்பினேன். நீங்கள் ஏன் என்னை இப்படி ஏமாற்றி விட்டீர்கள் என ராதிகா கோபியிடம் கேட்கிறார். நான் பாக்கியா டீச்சரின் தோழி என்று தெரிந்த பிறகும் கூட என்னை இந்த அளவுக்கு நீங்கள் ஏமாற்றி விட்டீர்கள் என ராதிகா கோபியிடம் கூறுகிறார். எப்படி அனைத்து உண்மைகளும் ராதிகாவுக்கு தெரிய வந்தது என கோபி திருட்டுத்தனமாக அடுத்து ஏதாவது பொய் சொல்லி ராதிகாவிடம் இருந்து தப்பிக்கலாம் என முயற்சி செய்யும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.