பாக்கியாவிடம் கோபி பற்றிய உண்மைகளை சொல்லும் எழில்? ‘பாக்கியலட்சுமி’ கதையில் அடுத்த திருப்பம்!

0
பாக்கியாவிடம் கோபி பற்றிய உண்மைகளை சொல்லும் எழில்? 'பாக்கியலட்சுமி' கதையில் அடுத்த திருப்பம்!
பாக்கியாவிடம் கோபி பற்றிய உண்மைகளை சொல்லும் எழில்? 'பாக்கியலட்சுமி' கதையில் அடுத்த திருப்பம்!
பாக்கியாவிடம் கோபி பற்றிய உண்மைகளை சொல்லும் எழில்? ‘பாக்கியலட்சுமி’ கதையில் அடுத்த திருப்பம்!

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கோபி யாரிடமோ போனில் அடிக்கடி பேசுவதை தெரிந்து கொள்ளும் பாக்கியா அதை பற்றி எழிலிடம் பேசுகிறார். இப்போது கோபி பற்றிய உண்மைகளை பாக்கியாவிடம் எழில் சொல்ல அதை அவர் எப்படி ஏற்றுக்கொள்வார் என்ற எதிர்பார்ப்புடன் கதை நகர இருப்பதாக தெரிகிறது.

பாக்கியலட்சுமி சீரியல்

தமிழ் சின்னத்திரையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கோபி, பாக்கியாவிடம் மாட்ட வேண்டும் என்பதே ரசிகர்களின் ஒரே விருப்பமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இதுவரை பாக்கியா மற்றும் ராதிகாவிடம் இருந்து ஒளிந்து மறைந்து பல தில்லாலங்கடி வேளைகளை செய்து வரும் கோபி கையும் களவுமாக மாட்ட வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் கோபி மாட்டுவது போல சில காட்சிகள் சீரியலில் இடம்பிடித்திருந்தாலும் எப்படியோ அவர் எஸ்கேப் ஆகி விடுகிறார்.

Exams Daily Mobile App Download

சீரியல் கதைப்படி, இதுவரை எழில் மற்றும் ராமமூர்த்தி தவிர ஒருவரும் கோபியை ராதிகாவுடன் சேர்த்து வைத்து பார்க்கவில்லை. ஆனால் உண்மை தெரிந்த இவர்கள் இருவரும் கோபிக்கு எதிராக நடவடிக்கை எடுக்காததும், பாக்கியாவிடம் உண்மையை சொல்லாததும் ரசிகர்களை அதிருப்திக்குள்ளாக்கி இருக்கிறது. இப்படி இருக்க ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் இன்றைய எபிசோடில் இரவு பாக்கியாவுடன் உறங்கும் கோபி, ராதிகாவின் போன் வரவும் வெளியே எழுந்து போய் பேசுகிறார். இதை பாக்கியா கவனித்தும், கவனிக்காதது போல வருத்தத்துடன் உறங்கி விடுகிறார்.

கண்ணம்மாவை வெறுப்பேத்த பாரதி எடுத்த அதிரடி முடிவு, அரங்கேறிய திருமணம் – “பாரதி கண்ணம்மா” சீரியலில் இனி வருபவை!

தொடர்ந்து மறுநாள் காலையில் இந்த விஷயம் பற்றி பாக்கியா எழிலிடம் பேச, ஆமாம் அம்மா அவரை நம்பாதே. அவருக்கு கேர்ள் ஃபிரண்ட் இருக்கு என கிண்டலாக கோபி பற்றிய உண்மைகளை கூறுகிறார். ஆனால், கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என எண்ணும் அப்பாவி பாக்கியா இந்த வயசில் உன் அப்பா அப்படி எல்லாம் செய்வாரா என எழிலுக்கே செக் வைத்து விடுகிறார். இதனால் எழில், ஒன்றும் சொல்லாமல் நகர்ந்து விடுகிறார். இந்த நிலையில், எப்போது தான் பாக்கியாவுக்கு கோபி பற்றிய உண்மைகள் தெரிய வரும்? எழில் அல்லது ராமமூர்த்தி உண்மையை சொல்வார்களா? என பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!