மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் வீட்டு வாடகைப் படி (HRA) உயர்வு – மெகா ஜாக்பாட் அறிவிப்பு!
சமீபத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஜனவரி முதல் அகவிலைப்படி 3% உயர்த்தப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்தது. இதனால் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 34 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இதை தொடர்ந்து வீட்டு வாடகைப் படி (HRA) உயர்வு அறிவிப்பும் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த HRA உயர்வால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயரும் என்பது குறிப்பிட வேண்டியவை.
ஜாக்பாட் அறிவிப்பு:
ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கத்தை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வும், பென்சன் வாங்குவோருக்கு அகவிலை நிவாரண உயர்வும் வழங்கப்படுகிறது. பணவீக்க விகிதத்துக்கு ஏற்ப அகவிலைப்படி உயர்வும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. கோவிட் நெருக்கடி காலகட்டத்தில் மத்திய அரசுக்கு செலவுகள் அதிகரித்ததால், மத்திய அரசு உழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமலேயே இருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பின் கடந்தாண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிதியாண்டின் கடைசி அமைச்சரவை கூட்டம் டெல்லியில் மார்ச் 30 நடைபெற்றது.
அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் மே 2 முதல் ஜூன் 13 வரை கோடை விடுமுறை – அரசுக்கு பரிந்துரை!
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அகவிலைப்படியை உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய அரசின் 7வது ஊதியக்குழுவின் பரிந்துரையை ஏற்று, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி 34 சதவீதமாக வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.9,544.50 கோடி செலவினம் ஏற்படும் எனவும், 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவர் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் கடந்த பிப்ரவரி மாதம் பணவீக்கம் 6.07 விழுக்காடாக உயர்ந்துள்ளது. பணவீக்கம் தொடர்ந்து மோசமாகி வரும் நிலையில், அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப் படி (HRA) உயர்வையும் வழங்க அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
PF சந்தாதாரர்கள் கவனத்திற்கு – ஆன்லைனில் EPF கணக்குடன் PAN எண்ணை இணைப்பது எப்படி?
முன்னதாக 2021 ஜூலை மாதம் வீட்டு வாடகை படி உயர்த்தப்பட்டது. அண்மையில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அடுத்தபடியாக வீட்டு வாடகை படியும் உயர்த்தப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கணிசமாக உயரும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வீட்டு வாடகை படி தொகை அந்தந்த நகரத்துக்கு ஏற்ப வழங்கப்படுகிறது. அந்த வகையில் X நகரங்களுக்கு 24%, Y நகரங்களுக்கு 16%, Z நகரங்களுக்கு 8% என்ற அடிப்படையில் வீட்டு வாடகை படி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் X நகரங்களுக்கு 5400 ரூபாய்க்கு மிகாமலும், Y நகரங்களுக்கு 3600 ரூபாய்க்கு மிகாமலும், Z நகரங்களுக்கு 1800 ரூபாய்க்கு மிகாமலும் வீட்டு வாடகை படி வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.