தமிழகத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் – பள்ளிக்கல்வி துறை முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் பள்ளிக்கு வெளியே மனவர்களுக்கு கற்பிக்கும் நோக்கில் இல்லம் தேடி கல்வி திட்டம் கொண்டி வரப்பட்டுள்ளது. தற்போது இத்திட்டத்தின் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களை தமிழக பள்ளிக்கல்வித் துறை மறுசீரமைத்துள்ளது.
இல்லம் தேடி கல்வி திட்டம்:
தமிழகத்தில் கடந்த வருடங்களில் பரவிய கொரோனா பெருந்தொற்று காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. இந்த நேரத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்ததது. மேலும் அரசு பள்ளி மானவர்களுக்கு கல்வி தொலைகாட்சி வாயிலாகவும் வகுப்புகள் எடுக்கப்பட்டது. இந்த நிலையில் மாணவர்களிடம் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரி செய்ய 1 – 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இல்லம் தேடி கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது. முதல் கட்டமாக இத்திட்டம் காஞ்சிபுரம், விழுப்புரம், மதுரை, திருச்சி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நீலகிரி உட்பட 12 மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.
சபரிமலை கோவிலுக்கு செல்லுவோர் கவனத்திற்கு – ஆகஸ்ட் 4 நடை திறப்பு!
தற்போது மாநிலம் முழுவதும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் தன்னார்வலர்களை கொண்டு மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மாணவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று கல்வி கற்பிக்கப்பட்டது. இத்திட்டத்தை மேம்படுத்தும் வகையில் மாநில, மாவட்ட, ஒன்றிய, பள்ளி அளவிலான 4 குழுக்கள் அமைக்கப்பட்டது. ஒவ்வொரு குழுக்களுக்கும் தலைவர், உறுப்பினர் செயலர் என உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வட்டார அளவிலான குழுவில் இரண்டு ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பு பணிகளை முழு நேரப் பணியாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து மாவட்ட அளவிலும் ஆசிரியர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தனர். தற்போது இல்லம் தேடி கல்விக்கான மாவட்ட மற்றும் வட்டார அளவிலான ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களை தமிழக பள்ளிக்கல்வித் துறை மறு சீரமைத்துள்ளது. அதன்படி, மாவட்டத்திற்கு ஒரு ஆசிரியர் ஒருங்கிணைப்பாளரும் ,ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ஒரு ஆசிரியரும், ஒருங்கிணைப்பாளரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.