தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு கூடுதலாக 2 முதல் மூன்று நாட்கள் வரை விடுமுறை – அரசு திட்டம்!

0
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு கூடுதலாக 2 முதல் மூன்று நாட்கள் வரை விடுமுறை - அரசு திட்டம்!
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு கூடுதலாக 2 முதல் மூன்று நாட்கள் வரை விடுமுறை - அரசு திட்டம்!
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு கூடுதலாக 2 முதல் மூன்று நாட்கள் வரை விடுமுறை – அரசு திட்டம்!

காந்தி ஜெயந்தி, திருவள்ளுவர் தினம் ஆகிய முக்கிய எட்டு நாட்களுக்கு மட்டுமே மதுபான கடைகள் தமிழகத்தில் மூடப்படுகின்றன. இதனால் டாஸ்மாக் ஊழியர்கள் வார விடுமுறை வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில் இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படலாம் என அரசு திட்டமிட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

தமிழக அரசுக்கு டாஸ்மாக் கடைகளின் மூலமாகவே அதிகமான வருமானம் கிடைத்து வருகிறது. தமிழகத்தில் மட்டுமே கிட்டத்தட்ட 5410 மதுபான கடைகள் இருக்கின்றன. இந்த மதுபான கடைகளின் வாயிலாக மக்களுக்கு பல மதுபான வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாகவே தமிழக அரசுக்கு மதுபான கடைகளை மூட வேண்டும் என்கிற கோரிக்கை வந்தபடியே தான் இருக்கிறது. ஆனால் தமிழக அரசு மதுபான கடைகளின் மூலமாகவே வசூலை அள்ளிக் கொண்டிருப்பதால் மதுபான கடைகளை மூடுவது குறித்து எந்த விளக்கமும் அளிப்பதில்லை.

TN Job “FB  Group” Join Now

மதுபான கடைகளுக்கு காந்திஜெயந்தி, திருவள்ளுவர் தினம், மகாவீர் ஜெயந்தி, நபிகள் நாயகம் பிறந்த நாள், வடலூர் ராமலிங்கம் நினைவு நாள், சுதந்திர தினம், குடியரசு தினம், மே தினம் ஆகிய எட்டு நாட்களுக்கு மட்டுமே விடுமுறை அளிக்கப்படுகிறது. மீதமுள்ள அனைத்து நாட்களிலும் மதுபான கடைகள் திறக்கப்பட்டு வசூல் வேட்டை நடத்தி வருகிறது. டாஸ்மாக் கடைகளில் விடுமுறை இல்லாத காரணத்தினால் மதுபான கடைகளில் வேலை செய்யும் ஊழியர்கள் வார விடுமுறை அளிக்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

TCS நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள் 2022 – பட்டதாரிகளுக்கு ஜாக்பாட் அறிவிப்பு!

மதுவிலக்கு அமல்படுத்தும் நோக்கில் கடந்த 2016ம் ஆண்டில் முதல்வராக இருந்த ஜெயலலிதா மதுபான கடைகள் செயல்படும் நேரத்தை குறைத்து கிட்டத்தட்ட 500 மதுபானக் கடைகளை மூட உத்தரவிட்டார். தற்போது தமிழகத்தில் திமுக ஆட்சி நடந்து வரும் வேளையில் திமுகவின் முக்கிய தலைவர்களின் பிறந்த நாளை சிறப்பு தினங்களாக அறிவித்து வருகின்றனர். இந்த சிறப்பு முக்கிய தலைவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவர்களின் பிறந்த நாளன்று மதுபானக் கடைகள் மூடப்படும் என தெரிவித்துள்ளனர். இதனால் மதுபான கடைகளுக்கு கூடுதலாக இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை விடுமுறை அளிக்க வாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. டாஸ்மாக் ஊழியர்களுக்கு விடுமுறை குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!