தமிழக பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் விடுமுறை? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் கடந்த ஜூன் 13ம் தேதி அன்று 2022-2023ம் ஆண்டிற்கான கல்வியாண்டு தொடங்கப்பட்டது. இதையடுத்து தற்போது இந்த கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதனால் மாணவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
மகிழ்ச்சியில் மாணவர்கள்
தமிழகத்தில் கடந்த கல்வியாண்டு கொரோனா காரணமாக பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டது. மேலும் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. அத்துடன் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக குறைவான நாட்களே நேரடி வகுப்புகள் நடைபெற்றதால் பொதுத்தேர்வுக்குரிய பாடங்கள் நடத்த முடிக்கப்படவில்லை. அதன் காரணமாக பாடங்களை நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று ஆசிரியர்கள் முழு வீச்சில் செயல்பட்டனர். அதனால் வாரத்தில் 6 நாட்கள் வரை வகுப்புகள் நடத்தப்பட்டது.
Exams Daily Mobile App Download
அதாவது, ஞாயிற்றுக்கிழமைகளை தவிர்த்து திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை வகுப்புகள் நடைபெற்றது. இது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மனச்சுமையை ஏற்படுத்தியது. அதனால் இந்த கல்வியாண்டு விரைவில் தொடங்கப்பட வேண்டும் என்றும் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதனை கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை மேற்கொண்டது. அதன்படி கடந்த ஜூன் 13ம் தேதி முதல் 2022-2023ம் ஆண்டிற்கான கல்வியாண்டு தொடங்கப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) நிலுவைத் தொகை? விரைவில் அறிவிப்பு!
அதன்படி தற்போது 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளது. அத்துடன் நடப்பு ஆண்டில் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளில் வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பள்ளிகளில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதனால் மாணவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். ஆனால் 10 முதல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.