தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சனிக்கிழமைகளில் விடுமுறை? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் எவ்வித தடையுமின்றி நேற்று ஜூன் 13ல் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் மாணவர்களை குஷிப்படுத்தும் விதமாக தமிழக அரசு ஒரு குட் நியூஸ் ஒன்றை அறிவித்துள்ளது.
தமிழக அரசு முடிவு:
கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் காரணத்தால் நாட்டில் பல மாற்றங்கள் அமைந்ததில் கல்வியும் ஒன்று. அதாவது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறாமல் ஆன்லைன் வாயிலாகத்தான் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இதனால் பள்ளி திறப்பு தேதி முடிவு செய்வதில் குழப்பம் நீடித்தது. இந்த ஆண்டு 2022ல் கொரோனோ தாக்கம் குறைந்து மீண்டும் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு தேர்வுகளும் முடிவடைந்தது. தற்போது ஒரு மாத கால கோடை விடுமுறையும் முடிவுக்கு வந்து நேற்று ஜூன் 13ல் நடப்பு 2022- 2023 ஆம் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் ஆரம்பமாகியுள்ளது.
TN Job “FB Group” Join Now
2020 மற்றும் 2021ல் ஆன்லைன் வாயிலாக பாடங்களை கற்று வந்த மாணவர்களுக்கு அதிக அளவு கவன சிதறல் ஏற்பட்டதால் கற்றலில் பாதிப்பு உண்டாகியது. இதனால் நடப்பு ஆண்டாவது அனைத்தும் பழைய நிலைக்கு மாறி மீண்டும் பள்ளிகள் திறக்க வேண்டும் என ஒவ்வொரு பெற்றோர்களும் நினைத்து வந்தனர். இப்படி இருக்கையில் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெறுவதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிகளவு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அது போல நடப்பு கல்வி ஆண்டின் முதல் நாளான நேற்று ஜூன் 13ல் பள்ளிகளுக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்களும் அன்போடு வரவேற்றனர்.
Post Office அசத்தல் சேமிப்பு திட்டம் – மாதம் ரூ.1400 முதலீடு செய்தால் ரூ.35 லட்சம் வரை ரிட்டன்ஸ்!
இந்நிலையில், முன்னதாகவே நடப்பு கல்வி ஆண்டில் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதன் படி தற்போது வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே பள்ளிகள் செயல்படும் எனவும் வார இறுதி நாளான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை என தெரிவித்துள்ளனர். இவ்வாறு சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் , பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.