செப்.24ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர்!
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்க அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிகளுக்கு விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாம் அலை என கோரத்தாண்டவம் ஆடியது. அதனை தொடர்ந்து நோய் தொற்று பரவும் விகிதத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. ஆன்லைன் வகுப்புகள் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு திருப்தி அளிக்காத நிலையில் பள்ளிகள் திறக்கும் தேதி குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வந்தனர்.
தமிழகத்தில் 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை – ராமதாஸ் கோரிக்கை!
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 1ம் தேதி முதல் 9, 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள தமிழகத்தின் சில மாவட்டங்களில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. அதனை தொடர்ந்து தமிழகத்தின் சில மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
தமிழக அரசு வேலையில் சேர விரும்புவோர் கவனத்திற்கு – காவல்துறை எச்சரிக்கை!
அதனை தொடர்ந்து ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் ஆசிரியர்களுக்கு நாளை சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதனை தொடர்ந்து திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.