தமிழகத்தின் ‘இந்த’ மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை – முக்கிய அறிவிப்பு இதோ!
தமிழகத்தில் தொடர்ந்து கடந்த வாரம் முதல் பரவலாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிகளுக்கு விடுமுறை:
தமிழகத்தில் நடப்பு ஆண்டு கோடை காலத்தில் ஆரம்பத்தில் இருந்தே அதிக அளவு வெப்பம் தாக்கி வந்தது. கோடை காலத்தின் ஆரம்ப கட்டமாக மார்ச் மாதத்திலேயே வெயில் 100 டிகிரியை கடந்து மக்களை வாட்டி வந்தது. இதனால் மக்கள் அதிக அச்சத்தில் இருந்தனர். ஆனால், அதன்பிறகு எதிர்பாராத விதமாக நல்ல மழை பெய்து மக்களை குளிர்வித்தது. அதன்பிறகு தொடங்கிய பருவ மழை வழக்கத்தை விட அதிக மழைபொழிவை தந்தது என்று வானிலை நிபுணர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் தான் மாணவர்கள் நேரடியாக வழக்கம் போல், ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து பள்ளிக்கு செல்கின்றனர். இடைப்பருவ தேர்வுகள் நடந்து முடிந்து இந்த மாதத்தின் இறுதியில் மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள் நடக்க உள்ளது. இந்நிலையில், தற்போது மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
சென்னை: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 ஆக விற்பனை – வாகன ஓட்டிகள் கவலை!
Exams Daily Mobile App Download
இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் நேற்று விடுத்த எச்சரிக்கையின் படி தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் இன்று அதிக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலை எங்கும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. எனவே, மக்கள் எங்கும் செல்ல முடியாத நிலை நீடிக்கிறது. இந்நிலையில், கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகா பள்ளிகளுக்கு செப்டம்பர் 13ம் தேதியான இன்று மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்