தமிழகத்தில் 1 – 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை – அரசுக்கு கோரிக்கை!

0
தமிழகத்தில் 1 - 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை - அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் 1 - 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை - அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் 1 – 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை – அரசுக்கு கோரிக்கை!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்களின் நலன் கருதி சனிக்கிழமைகளில் 1 -8ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விடுமுறை:

தமிழகத்தில் கடந்த வருடம் பரவிய கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதனால் மாணவர்களுக்கு மதிப்பிட்டு முறையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. நடப்பு ஆண்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் பொதுத்தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டது. இதற்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதி முதல் மே 28 வரை பொதுத்தேர்வு நடைபெறும். மேலும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 முதல் மே மாதம் 30 ஆம் தேதி வரை நடைபெறும்.

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

மேலும் ஏப்ரல் 25 முதல் செய்முறை தேர்வு தொடங்கும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இத்தேர்வானது மே 2 வரை நடைபெறவுள்ளது. கொரோனா தாக்கத்தால் வெகு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. அண்மையில் தான் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையும் வெளியாகி உள்ள நிலையில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக நாட்கள் குறைவாகவே உள்ளது. அதனால் மாணவர்களுக்கு சனிக்கிழமையும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நேரத்தில் கோடை வெளியிலின் தாக்கமும் அதிகரித்து வருகிறது. எப்போதும் ஒரு ஆண்டில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கோடை காலம் ஆகும். இந்த மாதங்களில் வெளியில் தாக்கம் அதிகரித்து காணப்படும். தற்போது கோடை காலம் நிலவுவதால் வெளியில் சுட்டெரிக்கிறது. அதனால் தினமும் பள்ளி செல்லும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அதனால் அவர்களின் நலன் கருதி பிரதி சனிக்கிழமை தோறும் பள்ளிகளுக்கு 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை விடுமுறை அளிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!