ஏப்ரல் 30 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!
கடந்த சில ஆண்டுகளை விட இந்த ஆண்டு கூடுதல் வெப்பநிலை நிலவி வருவதால் ஒடிசா மாநிலத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி கூடங்களை ஏப்ரல் 30 ஆம் தேதி வரைக்கும் மூடும் படி ஒடிசா அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பள்ளி விடுமுறை:
நாடு முழுவதிலும் தற்போது தான் கோடைகாலம் துவங்கியுள்ளது. வழக்கத்தை விட இந்த ஆண்டு தான் அதிகமான வெப்பநிலை நிலவி வருகிறது. அதிலும் தலைநகர் டெல்லி, தமிழகம், ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடந்த சில ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிக அளவில் வெப்பநிலை நிலவி வருவதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். அதிகமான வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழைப்பொழிவு ஏற்படுகிறது.
Exams Daily Mobile App Download
கூடுதலான வெப்பத்தின் காரணமாக மக்களுக்கு தோல் வியாதிகளும் வந்தபடி இருக்கின்றன. எப்போதும் இந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் தான் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால் பள்ளி மாணவர்களுக்கு மார்ச் மாதத்திலேயே அனைத்து பொதுத் தேர்வுகளையும் முடித்துவிட்டு ஏப்ரல், மே மாதம் முழுக்க கோடை விடுமுறை விடப் பட்டிருக்கும். ஆனால், கொரோனா விடுமுறை முடிந்து மாணவர்களுக்கு தற்போது தான் பள்ளி துவங்கப்பட்டுள்ளது.
Airtel, Jio & Vi வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் குறித்த முழு விவரம் இதோ!
மேலும், இதற்கு பிறகுதான் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு துவங்க இருக்கிறது. அதிலும் மே கடைசி வரை பொதுத் தேர்வு நடத்த இருப்பதால் ஜூன் மாதத்தில் தான் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த வெப்ப நிலையை பொறுத்துக் கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வருவதால் ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஒடிசா மாநிலத்திற்கு மட்டும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளை மூடும் படி ஒடிசா அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு இந்த விடுமுறைக்கு பிறகு ஏதேனும் தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தால் அந்த தேர்வு வழக்கம்போல நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.