பள்ளிகளுக்கு நவம்பர் 5 மற்றும் 6 ஆகிய நாட்களில் விடுமுறை – நவ.8 முதல் மீண்டும் திறப்பு!

0
பள்ளிகளுக்கு நவம்பர் 5 மற்றும் 6 ஆகிய நாட்களில் விடுமுறை - நவ.8 முதல் மீண்டும் திறப்பு!
பள்ளிகளுக்கு நவம்பர் 5 மற்றும் 6 ஆகிய நாட்களில் விடுமுறை - நவ.8 முதல் மீண்டும் திறப்பு!
பள்ளிகளுக்கு நவம்பர் 5 மற்றும் 6 ஆகிய நாட்களில் விடுமுறை – நவ.8 முதல் மீண்டும் திறப்பு!

புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் நவ.5, 6 ஆகிய தேதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் நவ.8 முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நவ.5, 6 விடுமுறை:

நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. அதனை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அடிப்படையில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்நிலையில் பெரும்பாலான இடங்களில் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனை தொடர்ந்து தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள் திறப்பது குறித்து பல்வேறு மாநிலங்களும் ஆலோசனை நடத்தின.

அப்பாவான விஜய் டிவி பிரபலம் – வாழ்த்து மழையில் நனையும் ஜோடி!

செப்.1ம் தேதி தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியிலும் கடந்த செப்.1ம் தேதி உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பின்னர் தமிழக அரசு நவ.1ம் தேதி தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளை திறக்க அறிவிப்பு வெளியிட்டது. தமிழகத்தை பின்பற்றும் புதுச்சேரி அரசு வெகு நாட்களாக தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள் திறப்பது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை.

தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு – 2022ம் ஆண்டிற்கான பொது விடுமுறை பட்டியல் வெளியீடு !

அதனை தொடர்ந்து நவ.8ம் தேதி பள்ளிகள் திறப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏனென்றால் நவ.1 விடுதலை நாள், 2ம் தேதி கல்லறை நாள், 3ம் தேதி தீபாவளியை முன்னிட்டு விடுமுறை, 4ம் தேதி தீபாவளி என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையானது புதுவை, காரைக்கால், ஏனாம் பிராந்தியங்களில் அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் பல தனியார் பள்ளிகளும் அந்த வாரம் முழுக்க விடுமுறை அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு பின்னர் வரும் நவ.8ம் தேதி முதல் கல்வித்துறை உத்தரவுப்படி பள்ளிகள் அரை நாள் செயல்படத் தொடங்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!