ஜூன் 19 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
ஹரியானா மாநிலத்தில் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிக்கான தேர்தல் வரும் ஜூன் 19 ஆம் தேதி நடைபெற இருப்பதால் அம்மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் என அனைத்திற்கும் பொது விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது விடுமுறை:
இந்திய சட்டமன்ற தொகுதியில் உள்ள 57 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, பீகார், ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஒடிசா, சத்தீஸ்கர், பஞ்சாப், தெலுங்கானா, ஜார்கண்ட் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே தேர்தல் நடத்தப்பட்டு 41 வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர். மீதமுள்ள ஹரியானா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு மட்டும் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
11 மாவட்டங்களில் ஜூன் 13ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
இதுமட்டுமல்லாமல் தேர்வு முடிவுகள் இன்று அதிகாலையில் வெளியிடப்பட்டன. அந்த முடிவின் பேரில், ஹரியானா மாநிலத்தில் பாஜக ஒரு இடத்தையும், சுயேச்சை வேட்பாளர் மற்றொரு இடத்தையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்நிலையில்,28 நகராட்சி கமிட்டிகள் மற்றும் 18 நகராட்சி மன்றங்களை சார்ந்த அனைத்து வார்டுகளின் தலைவர் மற்றும் உறுப்பினர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஜூன் 19 ஆம் தேதி நடைபெற இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிக்கான தேர்தல் ஜூன் 19 அன்று நடைபெற இருப்பதால் ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை மாநில அரசு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், ஹரியானா அரசாங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து துறைகள், வாரியங்கள், கார்ப்பரேஷன்கள், கல்வி நிறுவனங்கள், அனைத்து தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் ஆகிய அனைத்து நிறுவனங்களுக்கும் ஜூன் 19 ஆம் தேதி பொது விடுமுறை என குறிப்பிடப்பட்டு உள்ளது.