தமிழகத்தில் நாளை (மார்ச் 7) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு மார்ச் 7ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் அன்றைய தினம் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை:
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் ஏதேனும் ஒரு வரலாற்று சிறப்பு மிகுந்த திருத்தலங்கள் உள்ளது. இதில் ஆண்டுதோறும் பண்டிகைகளும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாக்களில் அம்மாவட்ட மக்களை தவிர்த்து பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து மக்கள் பங்கேற்பர். இதனை முன்னிட்டு விழாவில் அனைத்து மக்களுக்கும் கலந்து கொள்ளும் பொருட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஐயா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு கடந்த 4ம் தேதி வெள்ளிக்கிழமை அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.
All TNPSC Notification 2022
அதனால் அரசு அலுவலகங்கள் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அம்மாவட்டத்தில் மார்ச் 8ம் தேதி பகவதி அம்மன் கோயில் மாசிக்கொடை விழாவை முன்னிட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திருவிழா கடந்த பிப்ரவரி 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை தொடர்ந்து தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழா நடைபெற உள்ளது.
அதனால் அன்றைய தினம் அம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் அன்று மாவட்டத்தில் உள்ள பள்ளி , கல்லூரிகள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். விடுமுறையை ஈடு செய்ய மார்ச் 26ஆம் தேதி அன்று பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக சனிக்கிழமை பணி நாளாக கொண்ட அலுவலகங்களுக்கு மார்ச் 27-ஆம் தேதி பணி நாள் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.