தமிழகத்தில் ஜூலை 11ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தில் உள்ள நெல்லை நெல்லையப்பர் கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா விரைவில் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த திருவிழாவின் முக்கிய அம்சமாக வரும் ஜூலை 11ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
உள்ளூர் விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா பரவல், கடந்த ஜனவரி மாத இறுதியில் இருந்து படிப்படியாக குறைந்து வந்ததால் மார்ச் 31 உடன் அமலில் இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்பட்டன. இதனால் அனைத்து மதம் சார்ந்த திருவிழாக்கள் நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. அந்த வகையில் தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இதற்காக, மாவட்டங்களில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களுக்கு அரசு சார்பில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் அதை ஈடுகட்ட மற்றொரு நாள் பணி நாளாக அறிவிக்கப்படும்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் ஆனி பெருந்திருவிழா இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வரும் ஜூலை 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இதையொட்டி 48½ நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தொடக்க நிகழ்வான விநாயகர் திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும் இந்த திருவிழாவின் முக்கிய அம்சமாக வரும் ஜூலை 11ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
அனைத்து வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – 14 நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு!
எனவே இந்த ஆனித் தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் வரும் ஜூலை 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து நெல்லை மாவட்ட நிர்வாகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழா ஜூலை 11ம் தேதி நடைபெற இருப்பதை முன்னிட்டு அன்று மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும், அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் விடுமுறை (ஜூலை 11) நாளில் அரசு பொதுத்தேர்வுகள் ஏதும் இருந்தால், அந்த மாணவர்கள் மற்றும் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு உள்ளூர் விடுமுறை பொருந்தாது என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டு உள்ளார்.