இன்று முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? அரசு ஆலோசனை! இதற்காக தான்!
மாநிலம் முழுவதும் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள கோடை விடுமுறையை ஜூலை 13ம் தேதிக்கு மேல் நீட்டிப்பது குறித்து மாநில அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பள்ளி விடுமுறை
நாடு முழுவதும் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் தொடர்ச்சியாக கனமழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையை முன்னிட்டு பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து வகையான கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 11 முதல் 13 வரை அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை கடைபிடிக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
இப்போது தெலுங்கானா மாநில அரசு அறிவித்த விடுமுறைகள் இன்றுடன் (ஜூலை 13) முடிவுக்கு வருவதால் இந்த விடுமுறையை நீட்டிப்பது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, மாநிலத்தில் பெய்து வரும் கனமழை அடுத்த 3 நாட்களுக்கு நீடிக்கும் என்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறைகளை ஜூலை 13ம் தேதிக்கு மேல் 3 நாட்களுக்கு நீட்டிக்க அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வர்கள் கவனத்திற்கு – ஹால் டிக்கெட் குறித்த முக்கிய அறிவிப்பு!
அந்த வகையில் மாநில கல்வி அமைச்சர் பி.சபிதா இந்திரா ரெட்டி மற்றும் கல்வித் துறை செயலாளர் கருணா ஆகியோருடன் முதல்வர் கே சந்திரசேகர் ராவ் தலைமையில் இன்று (ஜூலை 13) பிற்பகல் நடைபெறும் கூட்டத்தில் இது குறித்து முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டதால் இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில் சனிக்கிழமைகள் தோறும் வகுப்புகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.