தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை – பதிலுக்கு தனியார் பள்ளிகள் வைத்துள்ள கோரிக்கை!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வானது இன்றுடன் முடிவடைய உள்ளதால் நாளை முதல் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் தனியார் பள்ளிகள் முக்கிய கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளன.
பள்ளி விடுமுறை
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் சரிவர இயங்கவில்லை. இதையடுத்து தற்போது தான் பள்ளிகள் வழக்கம் போல செயல்பட தொடங்கியுள்ளது. இதையடுத்து 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு கடந்த செப்டம்பர் 21-ம் தேதி அன்று தொடங்கப்பட்டது. ஆனால் இம்முறை ஒவ்வொரு மாவட்டத்திலும், பாட வாரியாக தனித்தனியாக கால அட்டவணை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து காலாண்டு தேர்வுகள் இன்றுடன் முடிவடைகிறது. அதன்படி நாளை முதல் காலாண்டு விடுமுறை தொடங்குகிறது.
அதன்படி நடப்பு ஆண்டில் காலாண்டு விடுமுறையானது வழக்கம் போல் அளிக்கப்படாமல் குறைவான நாட்கள் மட்டுமே அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் காலாண்டு விடுமுறையானது அக்டோபர் 1-ம் தேதி முதல் அக்டோபர் 5-ம் தேதி வரை மட்டுமே அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்பின்பு 6-ம் தேதி வழக்கம் போல் வகுப்புகள் தொடங்கப்படும் என கூறப்பட்டது. இந்த நிலையில் 1 முதல் 5-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு அக்டோபர் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற இருக்கிறது. அதனால் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 9-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் நீடிக்கப்பட்டது.
பொறியியல் மாணவர்களுக்கான 3வது கட்ட கலந்தாய்வு – அமைச்சர் பொன்முடி முக்கிய அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
இதையடுத்து தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 2-ம் கட்ட “எண்ணும் எழுத்தும்” பயிற்சி அக்டோபர் 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. அதனால் மீண்டும் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 12-ம் தேதி வரை விடுமுறை என தொடக்க கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆனால் இந்த விடுமுறையானது அரசு தொடக்கப்பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும். மேலும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு எந்தவித பயிற்சி வகுப்பும் நடத்தப்படவில்லை என்பதால் தனியார் பள்ளிகள் அக்டோபர் 6-ம் தேதி முதல் பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு முறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட வேண்டும் என இப்பள்ளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்