அரசு ஊழியர்களுக்கு நாளை விடுமுறை – திடீர் உத்தரவு!
நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, கடுமையான மின் தட்டுப்பாடு, எரிபொருள் விலை உயர்வு என இலங்கை மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். இந்த பொருளாதார நெருக்கடியால் போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு நாளை (மே 20 ஆம் தேதி) விடுமுறை என இலங்கை அரசு அறிவித்துள்ளது.
நாளை விடுமுறை:
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள இலங்கையில், கடும் வன்முறை வெடித்தது. பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக மகிந்த ராஜபக்சே அறிவித்த சில மணி நேரங்களில் ராஜபக்சே ஆதரவரவாளர்களுக்கும் அரசுக்கு எதிராக போராடுபவர்களுக்கும் இடையே வெடித்த மோதல், நாடு முழுவதும் பரவியது. இந்த வன்முறையில் சிக்கி உயிரிழப்புகளும் அதிக அளவில் ஏற்பட்டன. இலங்கையின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்கு வகிப்பது அந்த நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள், மலையங்களில் உள்ள தேயிலை தோட்டங்கள் மற்றும் ஆடை உற்பத்தி ஆகும்.
Exams Daily Mobile App Download
கொரோனா பரவல் காரணமாக 2020 மார்ச் மாதம் முதல் இலங்கையில் சுற்றுலா, தேயிலை உற்பத்தி மற்றும் ஆடை தயாரிப்பு ஆகிய மூன்றும் முற்றிலுமாகப் பாதிப்படைந்தது. இதனால் இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணைத் தொட்டு வருவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து காணப்படுகிறது. இந்நிலையில் இலங்கையில் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்று உள்ளார்.
TNPSC சற்றுமுன் வெளியான சூப்பர் வேலை – டிகிரி தேர்ச்சி போதும் || 40+ காலிப்பணியிடம்..!
இதற்கிடையில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள், உலக நாடுகளின் உதவியை இலங்கை அரசு கோரி வருகிறது. அதன்படி இந்தியாவும் அத்தியாவசிய பொருட்களை இலங்கைக்கு அனுப்பி வருகிறது. மேலும் தமிழகத்தில் இருந்து அத்தியாவசிய பொருட்களை கப்பல் மூலம் முதல்வர் ஸ்டாலின் நேற்று அனுப்பி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவின் பேரில் நாளை (மே 20) அத்தியாவசிய சேவைகளை தவிர பிற துறைகளை சேர்ந்த அரசு ஊழியர்கள் வேலைக்கு வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது பெட்ரோலை சேமிப்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.