Money Heist வெப் சீரிஸை கண்டுகளிக்க ஊழியர்களுக்கு விடுமுறை – ஐடி நிறுவனம் அதிரடி!
உலகளவில் பிரபலமான ‘Money Heist’ என்ற வெப் சீரிஸின் 5வது சீசன் வரும் 3ம் தேதி வெளியிடப்பட இருப்பதால் தனது ஊழியர்களுக்கு அன்று விடுமுறை அளித்து ஜெய்ப்பூர் நிறுவனம் ஒன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வெப் சீரிஸ்:
ஸ்பானிஷ் மொழியில் “லா காசா டி பேப்பல்” (தி ஹவுஸ் ஆஃப் பேப்பர்) என்ற பெயரில் நெட்ஃபிளிக்ஸ் ஒரு புதிய தொடரை ஒளிபரப்பியது. இந்த வெப் சீரிஸுக்கு உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். நெட்ஃபிளிக்ஸின் உலகளாவிய வெற்றிகரமான தொடர்களில் ‘Money Heist’ ம் ஒன்று. இந்த ஸ்பானிஷ் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதி சீசன் வரும் செப்டம்பர் 3ம் தேதி வெளியிடப்படுகிறது. இந்த சீசனின் எபிசோடுகள் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
ராதிகாவிற்கு வாங்கிய சேலையை கோபி காரில் இருந்து எடுக்கும் பாக்கியா – பரபரப்பு ப்ரோமோ ரிலீஸ்!
முதல் ஐந்து எபிசோடுகள் ஒரு பாகமாக வரும் 3ம் தேதி வெளியிடப்படும். அடுத்துள்ள ஐந்து எபிசோடுகள் இரண்டாம் பாகமாக மூன்று மாதங்கள் கழித்து டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ‘Money Heist’ வெப் சீரிஸை தனது நிறுவனத்தின் ஊழியர்கள் கண்டு கழிக்கும் விதமாக இந்தியாவின் ஜெய்ப்பூரை சேர்ந்த வெர்வ் லாஜிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அபிஷேக் ஜெயின் அன்றைய தினம் விடுமுறை அளித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
மேலும், ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக ‘Money Heist’ வெப் சீரிஸை பார்க்க வேண்டும் என்பதற்காக விடுமுறை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். நிறுவனத்தின் இந்த விடுமுறை அறிவிப்பினால் ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நிறுவனத்தின் அதிகாரபூர்வ டீவீட்டிற்கு இதுவரை 26 ரீட்வீட் மற்றும் 73 லைக்குகள் கிடைத்துள்ளது. இந்த நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், இதற்காக நாங்கள் போலியான காரணம் ஒன்றை தயாரித்திருந்தோம். ஆனால் அதற்கு இப்போது அவசியம் இல்லை என்றும், இதற்காக தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.