மே 30ம் தேதியன்று கல்லூரிகள் & பல்கலைகளுக்கு விடுமுறை – மாநில அரசு முடிவு!
மே 30ம் தேதியன்று சபித்ரி அமாபஸ்யா பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் ஒடிசா மாநிலத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கும் ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு
ஒடிசா மாநில அரசின் உயர்கல்வித் துறையின் கீழ் வரும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் “சபித்ரி அமாபஸ்யா” பண்டிகையை முன்னிட்டு மே 30 அன்று மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒடிசா மாநிலத்தில் அமாவாசை தினத்தன்று சபித்ரி அமாபஸ்யா கொண்டாடப்படுவதால் அன்று ஒரு நாள் மட்டும் பிராந்திய பொது விடுமுறையாக கடைபிடிக்கப்படுவது உண்டு. இதை முன்னிட்டு வரும் மே 30ம் தேதியன்று அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இது குறித்து அரசு முதன்மைச் செயலர் சாஸ்வத் மிஸ்ரா மாநிலத்தில் உள்ள அனைத்து மாநில அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் மற்றும் அனைத்து அரசு மற்றும் அரசு சாரா பட்டக் கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் உயர்கல்வித் துறையின் கீழ் வரும் அனைத்து அரசு ஆசிரியர் கல்வி நிறுவனங்களின் முதல்வர்களுக்கும் எழுதிய கடிதத்தில், ‘உயர்கல்வித் துறையின் கீழ் வரும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் 30.05.2022 (திங்கட்கிழமை) அன்று சாவித்ரி அமாவாஸ்யாவை முன்னிட்டு மூடப்பட்டிருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஐடி நிறுவன ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – 25% வரை சம்பளம் உயர வாய்ப்பு!
இந்த சாவித்ரி அமாவாஸ்யா என்பது ஒடிசா மாநிலத்தில் ஜயஸ்தா மாதத்தில் கடைபிடிக்கப்படும் ஒரு பிராந்திய பொது விடுமுறையாகும். இந்த நிகழ்வு ஆங்கில விடுமுறை நாட்காட்டியின் படி வழக்கமாக மே அல்லது ஜூன் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த சாவித்ரி விரதம் அல்லது சாவித்ரி அமாவாசை என்பது திருமணமான இந்துப் பெண்களால் அனுசரிக்கப்படும் அமாவாசை விரத நாளாகும். மேலும், இந்த பண்டிகை ஒடிசா, பீகார், உத்தரபிரதேசம் மற்றும் நேபாளத்திலும் கொண்டாடப்படுகிறது குறிப்பிடத்தக்கது.