அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் ஜூலை 26 வரை விடுமுறை – அரசு அறிவிப்பு!
மாநிலத்தில் 15 நாட்கள் கன்வர் யாத்திரை நடைபெற்று கொண்டிருப்பதால் அம்மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை என அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவல்களை இந்த பதிவில் காணலாம்.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:
உத்தரகாண்ட் மாநிலத்தின் மிகவும் சிறப்பு நிகழ்வான கன்வர் யாத்திரை ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 15 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதாவது, இந்த யாத்திரையின் போது எக்கச்சக்கமான சிவ பக்தர்கள் ஹரித்வார், கௌமுக் மற்றும் உத்தரகாண்டில் உள்ள கங்கோத்ரி மற்றும் பீகாரில் உள்ள சுல்தாங்கஞ்ச் ஆகிய புனிதத்தலங்களில் இருந்து கங்கை நதியின் புனித நீரை எடுத்து சென்று சிவனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். அதாவது, இந்தாண்டு கன்வர் யாத்திரை ஜூலை 14-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
கடந்த இரண்டு ஆண்டுகளுமே கொரோனா பரவலின் காரணமாக உத்தரகாண்ட் மாநிலத்தில் கன்வர் யாத்திரை நடைபெறவில்லை. மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கன்வர் யாத்திரை நடைபெற்று கொண்டிருப்பதால் எக்கச்சக்கமான சிவ பக்தர்கள் இந்த யாத்திரையில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், யாத்திரை நடைபெறும் பகுதி முழுக்க கன்வர் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், நகராட்சி எல்லைக்குள் மட்டுமே 75 கன்வர் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மையங்களிலும் சுமார் 8,000-10,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் இருக்கின்றனர்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வுதாரர்களுக்கான புதிய திட்டம் அறிமுகம் – முதல்வர் துவக்கி வைப்பு!
கிட்டத்தட்ட 5 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் இந்த யாத்திரையில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மாணவர்கள், ஆசிரியர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக இன்றிலிருந்து வரும் ஜூலை 26 ஆம் தேதி வரைக்கும் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அரசு, அரசு சாரா, தனியார், CBSE, கல்லூரிகள் என அனைத்து கல்வி மையங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பை அனைத்து கல்வி நிறுவனங்களும் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.