தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றதை தொடர்ந்து பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (நவ.12) ஆரம்ப பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
விடுமுறை அறிவிப்பு:
கடந்த வாரம் முதல் தமிழகத்தில் பல இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. சென்னையின் பல சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. அரசு வெள்ளப்பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு குழுவினரை களமிறக்கி மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் தங்களது உடமைகளை இழந்தனர். அரசு பல நிவாரண உதவிகளை செய்து வருகிறது. மழைக்காலம் முடியும் வரை அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்க முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
EPFO ஊழியர்களின் கவனத்திற்கு – விபத்து மரணம் ஏற்பட்டால் இரட்டிப்பு தொகை!
தொடர் கனமழை காரணமாக தமிழகத்தில் 23 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று வரை விடுமுறை வழங்கப்பட்டது. பல இடங்களில் மழை குறைந்ததால் வெள்ளநீர் வடிந்து வருகிறது. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை பாதிப்பு காரணமாக ஆரம்ப பள்ளிகளுக்கு (1 முதல் 5 ஆம் வகுப்பு வரை) இன்று (நவ.12) வெள்ளிக்கிழமை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாளை (நவ.13) உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
மற்ற நடுநிலைப்பள்ளி, உயர்நிலை பள்ளி மற்றும் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு வழக்கம் போல வகுப்புகள் நடைபெறும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வி. ஜெய்சந்திர பானு ரெட்டி அறிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து தமிழகத்தில் மழை பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். அதுமட்டுமின்றி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் வாயிலாக நிவாரணத் தொகையினை வழங்கவும் அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.