அரசு அதிகாரிகள், அலுவலர்களின் விடுமுறைகள் ரத்து – அரசு அதிரடி உத்தரவு!

0
அரசு அதிகாரிகள், அலுவலர்களின் விடுமுறைகள் ரத்து - அரசு அதிரடி உத்தரவு!
அரசு அதிகாரிகள், அலுவலர்களின் விடுமுறைகள் ரத்து - அரசு அதிரடி உத்தரவு!
அரசு அதிகாரிகள், அலுவலர்களின் விடுமுறைகள் ரத்து – அரசு அதிரடி உத்தரவு!

நாடு முழுவதும் தற்போது ஓமைக்ரான் மற்றும் கொரோனா தொற்று பரவலினால் கொரோனா மூன்றாவது அலை உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனால் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

அதிகாரிகளுக்கு விடுப்பு ரத்து:

நாடு முழுவதும் தற்போது ஓமைக்ரான் மற்றும் கொரோனா தொற்று பரவலினால் கொரோனா மூன்றாவது அலை உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் மத்திய அரசு அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் தேவைப்பட்டால் ஊரடங்கு விதித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் படிப்படியாக பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கூடுதல் கட்டுப்பாடுகள், இரவுநேர ஊரடங்கு மற்றும் வாரத்தின் இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்டவைகளை அமல்படுத்தி வருகின்றன.

திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் டிக்கெட் வழங்குவதில் மோசடி?

அந்த வகையில் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் வார நாட்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் அதாவது நிகழ்ச்சிகளில் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஓமைக்ரான் மற்றும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக டெல்லியில் வாரத்தின் இறுதி நாட்களில் முழுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அம்மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் இந்த நிலைமையை கையாள போதுமான மனிதவள தேவையை கருத்தில் கொண்டு டெல்லி அரசு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமல் – போலீஸ் பாதுகாப்பு தீவிரம்!

அதன்படி டெல்லியில் உள்ள அனைத்து அலுவலங்களில் உள்ள அதிகாரிகள் மற்றும் அலுவலர்களின் விடுப்புகளை ரத்து செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டெல்லி பேரிடர் மேலாண்மை செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு சார்பில் மனித வளங்களை பெருமளவு திரட்டுவது சம்பந்தப்பட்டிற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி அரசில் உள்ள அனைத்து துறைகளிலும் மருத்துவ விடுப்பு தவிர்த்து மற்ற அனைத்து விடுப்புகளையும் அதிகாரிகளுக்கு ரத்து செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. இது அரசு ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!