சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இலங்கை சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு விசேட வாராந்த விடுமுறை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக இத்திட்டம் கொண்டு வரப்பட்டது.
விசேட விடுமுறை:
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா பெருந்தொற்று இதனை கட்டுப்படுத்தும் விதமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு போன்றவற்றால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் கடைகள், அலுவலகங்கள் மூடப்பட்டதால் மக்கள் வேலை இழந்து, வாழ்வாதாரம் இழந்து பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு வந்தனர். மேலும் இதனால் பங்கு சந்தை சரிவு, உற்பத்தி குறைவு, போன்ற காரணங்களால் ஒவ்வொரு நாடும் பொருளாதார சரிவை சந்தித்தது. ஏற்கனவே மக்கள் வேலையின்றி சிரமப்பட்டு வந்த வேளையில் அதிகரித்த அத்தியாவசிய பொருட்களின் விலை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
Exams Daily Mobile App Download
மற்ற நாடுகளை தொடர்ந்து இலங்கை கடும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தது. அதனால் மக்கள் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வந்த நிலையில் இந்த நிலையை சரி செய்ய அரசு அத்தியாவசிய பணிகள் இல்லாமல் பிற வேலைகளை செய்வோர் வீட்டில் இருந்து பணியாற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் பயன்பாடு குறைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது எரிபொருள் பற்றாக்குறையை போக்கும் வண்ணம் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு விசேட வாராந்த விடுமுறை திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சுகாதாரத்துறை ஊழியர்கள் அனைவருக்கும் வார நாட்களில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது. அதாவது சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு எரிபொருள் நிரப்புவதில் முன்னுரிமை அளிக்கும் வகையில் வழங்கப்பட்ட அட்டை பயனற்றுப் போயுள்ள நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.