அடுத்த 2 நாட்கள் பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – மாநில அரசு உத்தரவு!

0
அடுத்த 2 நாட்கள் பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - மாநில அரசு உத்தரவு!
அடுத்த 2 நாட்கள் பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - மாநில அரசு உத்தரவு!
அடுத்த 2 நாட்கள் பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – மாநில அரசு உத்தரவு!

கர்நாடகா மாநிலத்தில் ஷிவமொக்கா மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு, அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.

விடுமுறை அறிவிப்பு

நாடு முழுவதும் கொரோனா 3ம் அலை பாதிப்புகள் வீழ்ச்சியடைந்து வந்த நிலையில் இந்த மாத துவக்கத்தில் இருந்து கர்நாடகாவில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டுமாக திறக்கப்பட்டது. இதற்கிடையில் ஹிஜாப் சர்ச்சை காரணமாக பிப்ரவரி 9ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு சமீபத்தில் தான் வகுப்புகள் மீண்டுமாக துவங்கியுள்ளது. இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தின், ஷிவமொக்கா மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் அடுத்த 2 நாட்களுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை (பிப்.22ம் தேதி) பள்ளிகளுக்கு விடுமுறை? கல்வித்துறை விளக்கம்!

அதாவது கர்நாடகாவின் ஷிவமொக்கா மாவட்டத்தை சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர், 5 பேர் கொண்ட குழுவினரால் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சந்தித்த உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா ஷிவமொக்கா, ‘கொலைக்கு பின்னணியில் இருக்கும் நபர்களை பற்றி காவல்துறைக்கு முக்கியமான தடயங்கள் கிடைத்துள்ளதாகவும், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் இது போன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது என்று கூறிய அவர் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் வரை மக்கள் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இப்போது கொலை சம்பவத்தை அடுத்து ஷிவமொகாவில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நகர எல்லையில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இரண்டு நாட்கள் வரை விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து துணை ஆணையர் செல்வமணி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘சிஆர்பிசியின் 144வது பிரிவின் கீழ் நகரில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

லட்சுமியின் அப்பா யார் என்ற உண்மையை சொன்ன பாரதி, கலங்கிய கண்ணம்மா – ஏமாற்றத்தில் ரசிகர்கள்!

அதனால் அடுத்த 2 நாட்களுக்கு அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூட உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் இந்த வழக்கை விசாரித்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். நாங்களும் அவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். இதனால் நகரம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே பள்ளி, கல்லூரிகளுக்கு பிப்ரவரி 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவித்துள்ளோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!