ஏப்ரல் 30ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – மாநில அரசு உத்தரவு!
தலைநகர் டெல்லி, தமிழகம், ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்த சில ஆண்டுகளை விட இந்த ஆண்டு வெப்பச்சலனம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை அம்மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் மூட அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பள்ளி விடுமுறை:
நாடு முழுவதும் தற்போது தான் கோடை காலம் துவங்கியுள்ளது. பெரும்பாலும் மார்ச், ஏப்ரல் மாதம் தான் முழுக்க வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். வீட்டை விட்டு மக்கள் வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரித்து கொண்டிருக்கும். கடந்த சில ஆண்டுகளை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் சற்று கூடுதலாகவே இருந்தது. கூடுதல் வெப்பத்தினால் அவ்வப்போது பல மாநிலங்களில் மழைப்பொழிவு இருந்து வந்தது. தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இருந்து வந்த நிலையில் தற்போது வழக்கத்திற்கு மாறாக வெப்பத்தின் அளவு அதிகமாக உள்ளது.
Exams Daily Mobile App Download
எப்போதும் மார்ச், ஏப்ரல் மாதங்களிலெல்லாம் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டு இருக்கும். ஆனால், 2 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ரெடியாகி வருகின்றனர். இந்த ஆண்டு மே மாதத்தின் இறுதி வரை மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து தலைநகர் டெல்லி, தமிழகம், ஒடிசா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.
தமிழகத்தில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வு கால அட்டவணை வெளியீடு!
இதனால் மக்களுக்கு தோல் வியாதிகள் அதிகளவில் ஏற்படுகிறது. குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஒடிசா மாநிலத்தில் உள்ள அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிக் கூடங்களை மூட மாநில அரசு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது ஒடிசா மாநிலத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெப்பச்சலனம் அதிகமாக இருக்கும் காரணத்தினால் ஏப்ரல் 26 முதல் 30 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு அங்கு உள்ள அனைத்து அரசு பள்ளிகளையும் மூட அரசு உத்தரவை பிறப்பித்துள்ளது. முன்பே திட்டமிடப்பட்ட தேர்வுகள் நடைபெறுவது எந்த தடையும் இருக்காது எனவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.