பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியீடு – அரசு திடீர் உத்தரவு!

0
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியீடு - அரசு திடீர் உத்தரவு!
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியீடு - அரசு திடீர் உத்தரவு!
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியீடு – அரசு திடீர் உத்தரவு!

அசாம் மாநிலத்தில் மோசமான வானிலை காரணமாக வடக்கு கவுகாத்தி, கமால்பூர் மற்றும் பிற பகுதிகளில் இன்று(ஜூன் 18) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து மேகாலயா மாநிலத்திலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஜூன் 20 வரை பள்ளிகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இன்று பள்ளிகளுக்கு விடுமுறை:

அசாம் மற்றும் மேகாலயாவில் இயல்பை விட 272 மிமீ கூடுதல் மழை பெய்துள்ளது. ஆகையால் இந்த இரு மாநிலங்களுக்கும் இந்த வார இறுதி வரை ரெட் அலர்ட் நீட்டிக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அசாமில் வெள்ள நிலைமை மோசமடைந்து மாநிலம் முழுவதும் பல இடங்களில் நிலச்சரிவைத் தூண்டும் இடைவிடாத மழைக்கு மத்தியில், முக்கிய ஆறுகளில் நீர் மட்டம் உயர்ந்து நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் என்று அம்மாநில வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த வெள்ளம் மற்றும் மோசமான வானிலை காரணமாக, ஜூன் 18, 2022 அன்று அசாம் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

உள்ளூர் ஊடக அறிக்கையின்படி, வடக்கு கவுகாத்தி, கமால்பூர், ரங்கியா மற்றும் கயான் வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகள் மூடப்பட்டன. மேலும் அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகு நாட்களாக பாதிக்கப்பட்டு வருகிறது. மக்களை மீட்பதற்கும், இயல்புநிலையை மீட்டெடுப்பதற்கும் அதிகாரிகள் முயற்சிகளை எடுத்துக் கொண்டுதான் இருக்கின்றனர். இருப்பினும் மோசமான வானிலை பற்றிய கணிப்புகள் முயற்சிகளை சீர்குலைத்து விடுகிறது. மேலும் வடக்கு கவுகாத்தி, கமால்பூர், ரங்கியா மற்றும் கயான் வருவாய் வட்டங்களில் மூடப்பட்ட அசாம் பள்ளிகள், நிலைமை சீரடைந்தவுடன் மட்டுமே மீண்டும் திறக்கப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – மலை பகுதியில் ஓராண்டு பணி? கல்வித்துறை விளக்கம்!

மேலும், அசாம் வெள்ளம் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது, இருப்பினும் இந்த விடுமுறை திட்டமிடப்பட்ட தேர்வுகளை பாதிக்காது என்றும் உத்தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. எந்தவொரு வகுப்புகளுக்கும் ஏதேனும் தேர்வுகள் திட்டமிடப்பட்டிருந்தால், பள்ளிகள் திறக்க அனுமதிக்கப்படும் என்று உள்ளூர் ஊடக அறிக்கைகள் குறிப்பிட்டுள்ளன. மேலும், இந்த உத்தரவு தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மேகாலயா மாநிலத்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜூன் 20, 2022 வரை பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.அனைவரின் பாதுகாப்பிற்காக வீட்டுக்குள்ளேயே இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!