அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (ஜூலை 7) விடுமுறை அறிவிப்பு – கனமழை எதிரொலி!
தற்போது கர்நாடகா மாநிலத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக கண்ணூர் உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (ஜூலை 7) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு:
கடந்த ஒரு சில நாட்களாக வெளுத்து வாங்கும் கனமழை காரணமாக கர்நாடகா மாநிலத்தின் பல்வேறு இடங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அந்த வகையில் அம்மாநிலத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் கனமழையை முன்னிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் நேற்று (ஜூலை 6) முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கண்ணூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று (ஜூலை 7) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
இது குறித்து கண்ணூர் மாவட்ட அதிகாரிகள் கூறுகையில், மாநிலத்தில் பெய்து வரும் கனமழையானது தொடர்ந்து அழிவை உருவாக்குகிறது. கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் கண்ணூரில் உள்ள பள்ளிகள் இன்று (ஜூலை 7) ஒரு நாள் மட்டும் மூடப்படும் என்றும் கண்ணூர் மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
LPG சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு – அதிர்ச்சியில் பொதுமக்கள்!
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், இன்று வரை அம்மாநிலத்தின் ஒரு சில பகுதிகளில் கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், பட்டப்படிப்பு கல்லூரிகள் ஆகியவை நேற்று (ஜூலை 6) முதல் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், கர்நாடகாவின் கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதன் காரணமாக மண் அரிப்பு மற்றும் மரங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.