அனைத்து பள்ளிகளுக்கும் மே 2 முதல் 8 நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு – இதற்காக தான்!
துபாய் நாட்டில் ஈத் அல் பித்ர் பண்டிகையை முன்னிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் மே 2ம் தேதி 9ம் தேதி வரை முதல் 8 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.
பள்ளி விடுமுறை
இஸ்லாமிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) இந்த ஆண்டு ஈத் அல் பித்ர் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் சுமார் 8 நாட்களுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து துபாய் அரசின் அறிவு மற்றும் மனித மேம்பாட்டு ஆணையம் (KHDA) வெளியிட்ட அதிகாரப்பூர்வ டுவிட்டர் பதிவில், அனைத்து பள்ளிகளுக்கும் ஈத் அல் பித்ர் விடுமுறைகள் மே 2 முதல் தொடங்கும் என்றும், மே 9 அன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் அறிவித்தது.
Exams Daily Mobile App Download
இதற்கு முன்னதாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அமைச்சரவை நாடு முழுவதும் செயல்படும் அனைத்து மத்திய அரசு நிறுவனங்களுக்கும் ஒரு வார ஈத் அல் பித்ர் விடுமுறைக்கு ஒப்புதல் அளித்தது. அந்த வகையில் ஏப்ரல் 30ம் தேதி சனிக்கிழமை தொடங்கி மே 6 வெள்ளிக்கிழமை வரை இந்த விடுமுறை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை முடிந்ததும் கூட்டாட்சி ஊழியர்கள் மே 9 முதல் மீண்டும் தங்களது பணியைத் தொடங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மே மாதம் 10 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – முழு பட்டியல் இதோ!
இப்போது ரமலான் 29 முதல் ஷவ்வால் 3 வரையிலான காலப்பகுதியில் அனைத்து தனியார் துறை ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய ஈத் விடுமுறையாக இருக்கும் என்று மனிதவள மற்றும் குடியேற்ற அமைச்சகம் முன்னதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் தலைநகர் அஜ்மானில் உள்ள மனிதவளத் துறை ஊழியர்களுக்கும் ஏப்ரல் 30 முதல் மே 8 வரை சுமார் ஒன்பது நாட்களுக்கு ஈத் அல் பித்ர் விடுமுறை அளிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.