அனைத்து பள்ளிகளுக்கும் ஏப்ரல் 4 முதல் விடுமுறை அறிவிப்பு – அரசு உத்தரவு!
இலங்கையில் தற்போது காணப்பட்டு வரும் மோசமான சூழல்களுக்கு மத்தியில் அனைத்து பள்ளிகளுக்கும் ஏப்ரல் 4 முதல் விடுமுறை அறிவிக்க வேண்டும் என கல்வி அமைச்சகத்துக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
பள்ளி விடுமுறைகள்
இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் நிலவி வரும் மோசமான பொருளாதார சூழ்நிலைகளுக்கு மத்தியில் மக்கள் போதிய உணவு இல்லாமல், மின்சாரம் இல்லாமல் கடுமையான இழப்புகளை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக காய்கறிகள், அரிசி உள்ளிட்ட அத்தியாவசியமான உணவுப்பொருட்களின் விலை கடும் ஏற்றத்தை கண்டு வரும் பட்சத்தில் மக்கள் போதிய வருமானம் இல்லாமல் பொருட்களை வாங்க தடுமாறி கொண்டிருக்கின்றனர். இதனுடன் இலங்கை முழுவதும் பால், பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய், எரிவாயு போன்ற பொருட்களுக்கும் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது.
TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு – தேர்வாணையம் தகவல்!
மேலும், ஒரு நாளைக்கு 14 மணி நேரத்திற்கு அங்கு மின்வெட்டு ஏற்படுவதால், விளக்குகளுக்கு மண்ணெண்ணெய் வாங்குவதற்கு கூட மக்கள் நீண்ட நெடு வரிசையில் காத்திருந்து அதுவும் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். இப்போது நீண்ட மின்வெட்டு காரணமாக எதிர்நோக்கும் அசௌகரியங்கள் மற்றும் போக்குவரத்து பிரச்சனைகள் காரணமாக எரிபொருளுக்கு ஏற்படும் செலவுகளை கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிகளுக்கும் ஏப்ரல் 4 முதல் விடுமுறை அறிவிக்க வேண்டும் என கல்வி அமைச்சகத்துக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – குறையும் கோடை விடுமுறை!
இது குறித்து PUCSL தலைவர் ஜானக ரத்நாயக்க வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இலங்கையில் நீண்ட மின்வெட்டு காரணமாக பாடசாலை மாணவர்கள் பல அசௌகரியங்களை எதிர்கொள்வதால், அவர்களுக்கு ஏப்ரல் 4ம் தேதி முதல் விடுமுறையை அறிவிக்குமாறு கல்வி அமைச்சுக்கு PUCSL பரிந்துரைத்துள்ளது’ என தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த சில நாட்களில் இலங்கைக்கு வந்தடைய இருக்கும் எரிபொருள் கப்பல்களை கருத்திற்கொண்டு மின்வெட்டு காலங்கள் குறைக்கப்படலாம் என அவர் கூறி இருக்கிறார். இதற்கு முன்னதாக, இலங்கையில் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக தேர்வுத் தாள்களை வாங்க முடியாமல் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகளை ரத்து செய்வதாக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.