கொரோனா பரவல் எதிரொலி – நாளை முதல் அரசு & தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு விடுமுறை!!
தமிழகத்தில் நிலவும் கொரோனா சூழலை கருத்தில் கொண்டு தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல் விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சுற்றறிக்கையினை தமிழக பள்ளி கல்வித்துறை அளித்துள்ளது.
கொரோனா பரவல்
தமிழகத்தில் தொடர்ச்சியாக கொரோனா பரவல் வேகமெடுத்து வருகின்றது. நாள் ஒன்றிற்கு 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும் 100க்கும் மேற்பட்டவர்கள் சராசரியாக மரணம் அடைந்து வருகின்றனர். இதனால் தமிழக அரசு சார்பில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தமிழகத்தில் ஞாயிற்று கிழமைகளில் மெட்ரோ ரயில் இயக்கம் – நிர்வாகம் அறிவிப்பு!!
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்படாமல் இருந்து வருகின்றன. மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வகுப்புகள் வாயிலாக பாடங்களாய் கற்று வருகின்றன. மாணவர்களின் நிலை இப்படியாக இருந்தாலும், ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வந்து கொண்டு தான் இருந்தனர். கொரோனா பரவல் அதிகரித்து வரும் இந்த சூழலில் பல ஆசிரியர்கள் இந்த நோய் தொற்றால் பாதிப்படைந்தனர்.
TN Job “FB Group” Join Now
இதன் காரணமாக தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வரும் மே 1 ஆம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்படவுள்ளதாக தமிழக கல்வி துறை சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளது. அதே போல் மே மாதத்தின் இறுதியில் தான் அடுத்த கல்வி ஆண்டிற்கான சேர்க்கை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது கொரோனா பரவல் எவ்வாறாக உள்ளது என்பதை ஆராய்ச்சி செய்து ஆசிரியர்களின் வருகை குறித்து தெரிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இது பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதெல்லாம் சரிதான் என்போன்ற தனியார் பள்ளி ஆசிரியரின் சோத்துக்கு வழி சொல்லுங்க அரசாங்கமே