தருமபுரியில் அரசு பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு – மாணவர்களுக்கு கொரோனா தொற்று!
கொரோனா தாக்கம் திடீரென அதிகரித்து வரும் நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
கொரோனா பாதிப்பு:
கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. தமிழகத்தில் கொரோனா 2ம் அலை படிப்படியாக குறைந்து வந்த நிலையில் செப்டம்பர் 1ம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் 9,10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. பள்ளிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டது.
அரசு வழங்கும் சிலிண்டருக்கான மானியத் தொகை – தெரிந்து கொள்ள எளிய வழிமுறை!
இருப்பினும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடத்தூர் அரசு பள்ளியில் உள்ள ஆசிரியருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர் சிலருக்கு கொரோனா உறுதியானது. இதனால் அப்பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் கொரோனா அச்சத்தின் காரணமாக பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவில் 3.8 கோடி வேலைவாய்ப்புகள் – 29% அதிகரிப்பு! மத்திய பணியாளர் அமைச்சர் தகவல்!
இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் 4 ஆசிரியர்கள் மற்றும் 2 மாணவர்களுக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டது. அதன் காரணமாக இந்த பள்ளிக்கு மாணவ, மாணவிகள் வர அச்சப்படுவதாக கூறப்படுகிறது. எனவே கொரோனா தொற்றால் ஆசிரியர்களும், மாணவர்களும் பாதிக்காத வகையில் போதிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் கோரப்பட்டு உள்ளது.