கோவை தொழில் நிறுவனங்கள் கவனத்திற்கு – நாளை விடுமுறை விட தேவையில்லை!
தமிழகம் முழுவதும் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. மக்கள் இந்த முகாமினை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியுள்ளார்.
தடுப்பூசி முகாம்:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் தீவிரமடைந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கொரோனா தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியது. தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதில் கேரள மாநிலம் முதலிடத்தில் உள்ளது. எனவே கேரள எல்லையில் உள்ள தமிழகத்தில் 9 மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து கோவையில் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.
குஜராத் மாநில முதல்வர் விஜய் ராம்னிக்லால் ரூபானி – இன்று திடீர் ராஜினாமா!
மெகா தடுப்பூசி முகாம் குறித்து கோவை மாவட்ட கண்காணிப்பாளர் சங்கர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சிறப்பு முகாமில் 1.5 லட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே மொத்தம் 1475 முகாம்களில் தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. ஒரு தடுப்பூசி செலுத்துபவர், ஒரு டேட்டா ஆபரேட்டர் என 2,980 பேரும் மக்களை அழைத்து வர 2 பேர் வீதம் 2959 அங்கன்வாடி பணியாளர்களும், இந்த பணிகளை கண்காணிக்க 338 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
IPL 2021 அப்டேட்ஸ் : துபாய் பறக்கும் சென்னை, மும்பை வீரர்கள்! என்னென்ன கட்டுப்பாடுகள்?
வணிக நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை முகாமிற்கு அழைத்து செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார். ஊரகப் பகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை தடுப்பூசி முகாம் செயல்படும். ஏதேனும் ஒரு ஷிப்ட் அடிப்படையில் ஊழியர்களை முகாமுக்கு அழைத்துச் செல்லலாம். அதற்காக விடுமுறை விடுவதற்கு அவசியம் இல்லை என ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் இந்த தடுப்பூசி முகாமினை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.