இன்று முதல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை? அரசு விளக்கம்!
பொருளாதார நெருக்கடியின் காரணமாக அனைத்து பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிப்பினை அரசு வெளியிட்டு உள்ளது. கூடுதலாக பள்ளிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை வழங்கப்பட்டுளள்து.
அதிரடி உத்தரவு:
இலங்கையில் எரிபொருள், உணவுப்பொருள் தட்டுப்பாடு, மின்சார, மருத்துவ சேவையில் சிரமம் என பலவகைகளிலும் அந்நாட்டு மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், இலங்கையில் கடந்த சில நாட்களாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இன்று (ஜூலை 4) பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு தொடர்வதால் இலங்கையில், அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளுக்கும் இன்று (ஜூலை 4 ) முதல் ஒரு வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
எரிபொருள் தட்டுப்பாட்டால் பள்ளிகளுக்கு மாணவர்கள், ஆசிரியர்கள் செல்லும் அளவிற்கு போதிய வாகன வசதி இல்லாததால் அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது .இந்நிலையில் அடுத்தடுத்து பள்ளிகள் விடுமுறை நீட்டிக்கப்பட்டு வருவது அந்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். எரிபொருள் நெருக்கடி காரணமாக பலர் மிதிவண்டிகளைப் போக்குவரத்து முறையாகப் பயன்படுத்துவதைத் தேர்வு செய்கிறார்கள்.
HDFC Ergo நிதி நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்க்கான வேலை – ஆரம்ப ஊதியம் ரூ.3,50,000!
மேலும் இலங்கைக்கு இந்தியா எரிபொருள் கொடுத்து உதவியது. கடைசியாக இந்திய உதவி ஜூன் 22ல் இலங்கை சென்று சேர்ந்தது. அதுவும் முடிந்துவிட்ட நிலையில் இலங்கை பெரும் சவாலை எதிர் கொண்டுள்ளது. மேலும் ரஷ்யா, மலேசியா நாடுகளிடம் எரிபொருள் உதவி கோரியுள்ளது. மேலும், இலங்கை அரசு வெளிநாடு வாழ் இலங்கை மக்கள் உள்நாட்டு சொந்தங்களுக்கு நிதியுதவி செய்யுமாறும் கோரியுள்ளது. இலங்கை, மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர் கொண்ட நிலையில் கொழும்பில் உணவுப் பணவீக்கம் 57.4 சதவீதமாக உயர்ந்ததாக மே மாதம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது