தமிழகத்தின் 9 மாவட்ட பள்ளி & கல்லூரிகளுக்கு 8ம் தேதி விடுமுறை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தின் வருகிற 8ம் தேதி 9 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். எந்த எந்த மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவினை முழுமையாக படிக்கவும்.
உள்ளூர் விடுமுறை
இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு சிறப்பான பண்டிகை இருக்கும். அந்த வகையில் தமிழகத்தில் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடுவது போல, கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக எந்த வித பண்டிகைகளும் சிறப்பாக கொண்டாடப்படவில்லை. தற்போது இந்த ஆண்டு கொரோனா பரவல் மிகவும் குறைந்து வருவதால் முக்கிய பண்டிகைகளை கொண்டாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மீண்டும் வீட்டை விற்கும் முயற்சியில் மூர்த்தி, வாங்க முன்வரும் மீனா அப்பா – லேட்டஸ்ட் ப்ரோமோ!
அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படும் ஓணம் திருவிழா எப்போதும் போலவே கொண்டாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களுக்கும் ஓணம் பண்டிகை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் இருக்கும் மலையாள மக்கள் ஓணம் பண்டிகையினை கொண்டாடுவர். தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மலையாள மக்கள் பலரும் வாழ்ந்து வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், கன்னியாகுமரி மற்றும் திருவள்ளூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்