தமிழகத்தில் ஏப்ரல் 11 (திங்கள்) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி அன்று தேர்த்திருவிழா நடைபெறவுள்ளது. இதனால் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஏப்ரல் 11 ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.
உள்ளூர் விடுமுறை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலும் ஒன்றாகும். ஆண்டுதோறும் இந்த கோவிலில் பங்குனி திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருந்த காரணத்தினால் தமிழகத்தில் உள்ள எந்த கோவில்களும் திறக்கப்படவில்லை. தற்போது கொரோனா பரவல் ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதால் அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா நடைபெறவுள்ளதால் எக்கச்சக்கமான பக்தர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை அம்மனுக்கு காப்பு கட்டி திருவிழாவை தொடங்குகின்றனர். பல ஊர்களில் இருந்து பக்தர்கள் வந்து பால்குடம், காவடி எடுத்துக்கொண்டு பாதயாத்திரை முதலான நேத்திக்கடன்களை செய்வர். மேலும், திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சி நடைபெறும்.
அடுத்த ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – அதிருப்தியில் பொதுமக்கள்!
இந்த கோவிலின் சிறப்பு அம்சமான தேர்த்திருவிழா ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. பல ஊர்களில் இருந்து பக்தர்கள் நேத்திக்கடன் செலுத்த வருவதால் கூட்டம் அதிகமாகவே இருக்கும். இதனால் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். கூட்டம் அதிகமாக இருப்பதால் கொரோனா பரவவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் மாஸ்க் அணிந்து கொள்ளும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.