தமிழகத்தில் நாளை (மார்ச் 22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
தமிழகத்தில் 2 ஆண்டுகளுக்கு பின் கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குள் வந்ததை அடுத்து கோவில்களில் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் பண்ணாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு வரும் மார்ச் 22 ஆம் தேதி அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
உள்ளூர் விடுமுறை அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா முதல், இரண்டாம், மூன்றாம் அலை தாக்கம் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக கோவில்களில் திருவிழாக்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. தற்போது அரசின் துரித நடவடிக்கையால் கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. அதனால் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி இருக்கின்றனர். பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் வழக்கம் போல பாடங்களை கவனித்து வருகின்றனர்.
மார்ச் 23 முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமல் – அரசின் திடீர் உத்தரவு!
இந்நிலையில் பிரசித்தி பெற்ற கோவில்களில் 2 ஆண்டுகளுக்கு பின் திருவிழாக்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால் பக்தர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் பண்ணாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு வரும் மார்ச் 22 ஆம் தேதி அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சத்தியமங்கலத்தில் உள்ள புகழ்பெற்ற பண்ணாரியம்மன் கோவிலில் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழாவிற்கு ஏகப்பட்ட மக்கள் வருவார்கள்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு இம்மாதத்தில் மீண்டும் 3% DA அதிகரிப்பு? கணக்கீட்டு விவரங்கள் இதோ!
உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்வது வழக்கம். கடந்த ஆண்டுகளில், கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் இன்றி குண்டம் திருவிழா நடைபெற்றது. இந்த ஆண்டு குண்டம் திருவிழா கடந்த மார்ச் 7 ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மார்ச் 15 ஆம் தேதி அம்மன் சப்பரம் திருவீதி உலாவும், திருகம்பம் சாட்டுதலும் நடைபெற்றது. மேலும் மார்ச் 21 ஆம் தேதி தீக்குண்டம் வார்ப்பு விழாவும் 22 ஆம் தேதி அதிகாலை பக்தர்கள் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும் நடக்க இருக்கிறது. இதனால் குண்டம் திருவிழாவை முன்னிட்டு வரும் மார்ச் 22 ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்ணி உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்