தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சாமி கோவில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு ஏப்ரல் 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.
உள்ளூர் விடுமுறை
கடந்த 2 வருட காலமாக கொரோனா தொற்றால் எந்த ஒரு மாவட்டத்திலும் திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கோவில் வளாகத்தில் மக்கள் இன்றி பூஜைகள் செய்யப்பட்டன. இந்த வருடம் கொரோனா தொற்று சற்று குறைந்துள்ளது. இதனால் கொரோனா தளர்வுகள் அளிக்கப்பட்டு அனைத்து மாவட்டத்திலும் விழாக்களை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டதில் நடந்த தேர் திருவிழா மற்றும் மதுரை சித்திரை வெகு விமர்சியாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அதன்படி, இந்த ஆண்டு சித்திரை திருவிழா ஏப்ரல் 21ம் தேதி அதிகாலை 5 மணியளவில் கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது. இன்றிலிருந்து 10 நாட்களுக்கு காலை மற்றும் 10 உற்சவ நாட்களுக்கு தினமும் காலை மற்றும் இரவு வேளையில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
ExamsDaily Mobile App Download
இந்த நிலையில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சாமி கோவில் சித்திரைத்தேர் திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு ஏப்ரல் 29ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கும் அரசு ஊழியர்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார். விடுமுறையை ஈடுசெய்ய மே 7ஆம் தேதி பணி நாளாக செயல்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.