தமிழக கல்லூரிக்கு விடுமுறை அறிவிப்பு – கொரோனா பரவல் எதிரொலி!
தமிழகத்தில் இந்த மாதம் தான் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் உற்சாகத்துடன் நேரடி வகுப்புகளுக்கு சென்று வரும் நிலையில் மீண்டும் கொரோனா பரவல் தலைதூக்கி வருகிறது. அதனால் ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் அறிவிக்கப்படுமா என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
மாணவர்களுக்கு கொரோனா:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் தான் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல செயல்படத் தொடங்கியது. இந்நிலையில், மாணவர்கள் நீண்ட நாட்களுக்கு பின் வழக்கம் போல உற்சாகத்துடன் வகுப்புகளுக்கு சென்று வருகின்றனர். மேலும் 2022-23 கல்வியாண்டு புதிதாக தொடங்கப்பட்டு மாணவர்கள் அடுத்த ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளனர். இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.
Exams Daily Mobile App Download
மேலும், தினசரி கொரோனா பாதிப்பு நாட்டில் 1000யை கடந்து வரும் நிலையில் சென்னையில் தினசரி பாதிப்பு 400யை நெருங்குகிறது. அதனால் சென்னை செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் அமல்படுத்தி இருக்கிறது. எனவே, பொது மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், பொது இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் எனவும் மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
டிகிரி முடித்தவர்களுக்கு மாதம் ரூ.12,000/- ஊதியத்தில் அரசு வேலை – முழு விவரங்களுடன்…!
மேலும் சென்னையில் போரூர் மற்றும் திருவள்ளூரில் செயல்பட்டு வரும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து, கணிசமாக அதிகரித்து வரும் கொரோனாவால் கல்லூரிகளில் மாணவர்களுக்கு பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே ஐஐடி மற்றும் மருத்துவக் கல்லூரி, கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரிகளில் கொரோனா தொற்று மாணவர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அந்த கல்லூரிகளுக்கு தற்போது விடுமுறை விடப்பட்டுள்ளது.