அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு? அரசுக்கு கோரிக்கை! இதற்காக தான்!
மாநிலம் முழுவதும் தற்போது நிலவிக் கொண்டிருக்கும் அதிக அளவு வெப்ப அலை காரணமாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பாதிக்கப்படுவதால் நேரடி வகுப்புகளை நிறுத்த வேண்டும் என்று மேற்கு வங்க அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் மூடல்
நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு, புதிய கல்வியாண்டிற்கான வகுப்புகள் மீண்டும் துவங்கி இருக்கிறது. ஆனால், மேற்கு வங்க மாநிலத்தில் நிலவும் வெப்ப அலை காரணமாக பல்வேறு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கொல்கத்தா மற்றும் பிற தெற்குப் பகுதிகளில் செயல்பட்டு வரும் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாற்றப்பட்டாலும், வடக்கு வங்காளத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் வழக்கம் போல பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் கடுமையான வெப்பச் சலனம் காரணமாக வடக்குப் பகுதியை சேர்ந்த பள்ளிகளையும் மூட வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ டாக்டர் ஷங்கர் கோஷ் அரசுக்கு கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து எழுதப்பட்டுள்ள கடிதத்தில், ‘கடந்த சில நாட்களாக, வடக்கு வங்காளத்தில் கடுமையான வெப்ப அலை வீசுகிறது. இந்நிலையில், ஆரம்ப மற்றும் நடுநிலைப் பிரிவு மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் சிரமம் இருப்பதாக பெற்றோர்கள் கூறுகின்றனர். இதனால் பள்ளிகளை திறக்கும் முடிவை அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – வட்டி விகிதம் உயர்வு!
இதற்கிடையில், மாணவர்களின் உடல் நலம் அதிகளவு வெப்பத்தால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக பள்ளிகளுக்கு தளர்வுகளை வழங்குமாறு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்த வழிகாட்டுதல்களின்படி, பள்ளிகள் செயல்படும் நேரத்தை மாற்றியமைக்கவும், பள்ளி நேரங்களின் எண்ணிக்கையை குறைக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள் குறித்த விதிமுறைகளை தளர்த்துவதற்கும், தோல் காலணிகளுக்கு பதிலாக கேன்வாஸ் காலணிகளை அணியவும் அரசாங்கம் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.