தமிழக பள்ளிகளுக்கு இன்று அறிவிக்கப்பட்ட விடுமுறை? – மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!
தமிழகம் முழுவதும் பரவலாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழை காரணமாக திருவாரூர் மற்றும் நன்னிலம் பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட விடுமுறை குறித்து தற்போது புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கனமழை விடுமுறை:
தமிழகத்தில் நிலவும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக பல மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பொதுவாக இது போன்ற கனமழை நாட்களில் பள்ளி செல்லும் குழந்தைகள் சாலையில் தேங்கியிருக்கும் மழை நீரில் மற்றும் கனமழையில் பள்ளிக்கு செல்வது சிரமமான காரியம் என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். இதற்கு பதிலாக வேறு ஒரு விடுமுறை நாள் வேலை நாளாக அறிவிக்கப்படும்.
இந்நிலையில், பள்ளி குழந்தைகள் கொரோனா காரணமாக தொடர்ந்து பல நாட்களாக கிட்டத்தட்ட 2 வருடங்களாக பள்ளிக்கு செல்ல வில்லை. இதனால் அவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படுவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். நடப்பாண்டில் தான் பள்ளிகள் வழக்கம் போல் திறக்கப்பட்டு, மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு திட்டமிட்டபடி நடந்து வருகிறது. இதனால் மாணவர்களும் மிகுந்த உற்சாகத்துடன் தேர்வை எதிர்கொண்டுள்ளனர்.
பள்ளியில் திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு – குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு!
Exams Daily Mobile App Download
தற்போது திருவாரூர் மற்றும் நன்னிலம் தாலுகாவை சேர்ந்த பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இதனால் மாவட்ட ஆட்சியர் முன்னதாக இந்த பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு செப்டம்பர் 27ம் தேதியான இன்று விடுமுறை அறிவிப்பை விடுத்தார். ஆனால்,காலாண்டு தேர்வு நடந்து வரும் தற்போதைய நிலையில், பள்ளிக்கு விடுமுறை அளித்தால், தேர்வு பாதிக்கப்படும் என்பதால், பள்ளிகளுக்கான விடுமுறையை ரத்து செய்து தற்போது மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்