ரேஷன் கடைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிப்பு – குவியும் மக்கள்!
தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதி இரண்டாம் தவணை ரூ.2000 மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் பகுதியில் கொரோனா நிவாரண நிதி மற்றும் மளிகை பொருட்கள் பெற ரேஷன் கடைகளில் மக்கள் கூட்டம் குவிந்து வருகிறது. இதனால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
ரேஷன் கடைகள்:
தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் கொரோனா நிவாரண நிதி மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து கடந்த மே மாதம் கொரோனா நிவாரண நிதி முதல் தவணை வழங்கப்பட்ட நிலையில் தற்போது கொரோனா நிவாரண நிதி இரண்டாம் தவணை ரூ.2000 மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ஜூன் 28 வரை வங்கிகள் செயல்படும் நேரம் குறைப்பு!
இந்நிலையில் ராமநாதபுரம் பகுதியில் ரேஷன் கடைகளில் நிவாரண நிதி மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பை வாங்குவதற்கு மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் குவிந்து வருவதாகவும் இதனால் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குற்றம் எழுப்பப்பட்டுள்ளது. ராமநாதபுரம் பகுதியில் திடீரென்று கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ரேஷன் கடைகளுக்கு விடுப்பு விடப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இதன் காரணமாக நேற்று (திங்கள்கிழமை) வெளிப்பட்டினம் மதுர தெருவில் உள்ள 2 ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை பெறுவதற்கு மக்கள் கூட்டமாக அலை போல் திரண்டு வந்தனர். அவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தாலும், சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்கவில்லை. தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 100க்கும் கீழ் குறைந்து காணப்பட்டு வரும் நிலையில் இதுபோன்ற செயலால் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.