தமிழகத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை – அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி அன்று நடைபெற உள்ளது. அதனால் தேர்தலுக்கான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து தேர்தல் முன்னிட்டு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறையை அரசு அறிவித்துள்ளது.
மதுக்கடைக்கு விடுமுறை
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. அத்துடன் பள்ளி, கல்லூரிகளை கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த ஆண்டு நடைபெற இருந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை பிப்ரவரி 19ம் தேதி நடைபெறும் என்று அரசு தெரிவித்துள்ளது.
விஜய் டிவி குக் வித் கோமாளி ‘வெங்கடேஷ் பட்’ எடுத்த அதிரடி முடிவு – வைரலாகும் தகவல்!
மேலும் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வாக்கு எண்ணிக்கை வருகிற 22ம் தேதி அன்று நடைபெறும். அதனால் தேர்தலை சிறப்பான முறையில் நடத்துவதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இது தொடர்பாக முக்கிய அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் கூறியதாவது, அனைத்து மாவட்டத்திற்கும் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை வருகிற பிப்ரவரி 19ம் தேதி நடைபெற உள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் புதிய வரவாக நடிகை தேஜஸ்வினி அறிமுகம்? ஷாக்கிங் ப்ரோமோ ரிலீஸ்!
அத்துடன் வாக்கு எண்ணிக்கை வருகிற 22ம் தேதி அன்று நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் 17ம் தேதி முதல் காலை 10 மணி முதல் 19ம் தேதி நள்ளிரவு 12 மணி வரையிலும் அத்துடன் 22ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளிலும் மற்றும் அந்த பகுதிகளை சுற்றி 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பீர், ஒயின் மற்றும் இந்திய தயாரிப்பு மதுபானங்கள் விற்பனை செய்யும் மதுபான கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் மூட வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.