காரன்வாலிஸ் பிரபு
TNPSC, UPSC பாடக்குறிப்புகள்- கிளிக் செய்யவும்
இந்திய வரலாறு பாடக்குறிப்புகள்-கிளிக் செய்யவும்
தலைமை ஆளுநர் :
- கி.பி.1786 ஆம் ஆண்டு இந்தியாவின் தலைமை ஆளுநராக காரன் வாலிஸ் பிரபு நியமிக்க பட்டார்.
நிலவரித் திட்டம்:
- ஒரு குறிப்பிட்ட தொகையை பணமாக கருவூலத்தில் செலுத்த வேண்டும் என்ற நிலவரித்திட்டத்தை அறிமுகப் படுத்தினர் .
நிர்வாக சீர்திருத்தம்:
- காரன் வாலிஸ் பிரபு “இந்திய குடிமையியல் தந்தை” என அழைக்கப் பட்டார்.
- கம்பெனி ஊழியர்கள் தனிப்பட்ட முறையில் வியாபாரம் செய்வதைத் தடை செய்தார்.
- அனைத்து உயர் பதவி ஆங்கிலேயர்களுக்கு ஒதுக்கப்பட்டது.
- இந்தியர்கள் துணை நிலை அலுவலர்கள் பதவிகளுக்கு மட்டுமே தேர்வு செய்யப் பட்டனர்.
காவல் துறைச் சீர்திருத்தம் :
- கி.பி. 1791 ஆம் ஆண்டு காவல்துறை கல்கத்தாவில் காவல்துறை ஆணையர் நியமனம் உருவாக்கப்பட்டது.
- இந்தியர்களை உயர்பதவியில் நியமிக்கப்படவில்லை.
நீதித்துறை:
- நீதிபணியிலிருந்து மாவட்ட ஆட்சியர் விடுவிக்கப்பட்டு வருவாய்த்துறை பொறுப்பு மட்டும் ஒப்படைக்கப்பட்டது
மாகாண நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்ட இடங்கள்:
- டாக்கா
- கல்கத்தா
- முர்ஷிதாபாத்
- பாட்னா
காரன்வாலிஸ் சட்டத் தொகுப்பினை கி.பி.1793 ஆம் ஆண்டு சர்ஜார்ஜ் பரலோ என்பவர் தொகுத்து வெளியிட்டார்.
வருவாய்த்துறை:
- 1787 இல் வங்காளம் பல பிரிவாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவும் ஒரு ஆட்சியரின் கீழ் நிர்வகிக்கப்பட்டது.
- காரன் வாலிஸ் வருவாய்த்துறையை உருவாக்கி ஆட்சியர்களின் செயல்பாட்டை மேற்பார்வை செய்தார்.
வணிக சீர்திருத்தம்:
- காரன்வாலிஸ் ஆங்கிலயேர்களை இந்திய வியாபாரிகளோடு நேரிடையாக பொருள்களை வாங்கும் அல்லது விற்கும் முறையினை அறிமுகப்படுத்தினார்.
- ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் வியாபாரம் பெருகியது.
திப்புசுல்தான் :
- திப்புசுல்தான் கி.பி.1753 ஆம் ஆண்டு ஹைதர் அலியின் மகனாக பிறந்தார்.
- இந்திய நாட்டினை பாதுகாக்க வலிமை மிகுந்த கோட்டைகளை உருவாக்கியவர்.
- திப்பு சுல்தான் ஆங்கிலேயர்களை வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கோதோடு ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர் தொடுத்து அதில் தோல்வியுற்றார்.
- கி.பி.1792 ஆம் ஆண்டு கையொப்பமான சீரங்கப்பட்டின அமைதி ஒப்பந்தம் மூன்றாவது மைசூர் போர் முடிவுக்கு வந்தது.
துணைப்படைத்திட்டம்:
- காரன்வாலிஸ் பிரபு தொடர்ந்து வெலெஸ்லி பிரபு கவர்னர் ஜெனரலாக பதவியேற்றார்
- இவர் துணைப்படைத்திட்டம் என்ற சுதேச சாம்ராஜ்யங்களை ஆங்கில அரசாட்சியின் கீழ் கொண்டு வர எண்ணினார்.
நான்காவது ஆங்கில மைசூர் போர்:
- திப்பு சுல்தான் துணை படை திட்டத்தை ஏற்க மறுத்து ஆங்கிலேயர்களுடன் கி.பி.1799 ஆம் ஆண்டு மாளவல்லி எனும் இடத்தில் போர் தொடுத்த போது திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்டார்.
- மே 4 ஆம் நாள் ஸ்ரீரங்கப்பட்டினத்தை காக்க முயன்ற போது கொல்லப்பட்டார்.