‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகை கொரோனாவால் உயிரிழப்பு – ரசிகர்கள் அதிர்ச்சி!
ஹிந்தி மொழியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘அனுபமா’ சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை மாதவி கோங்கடே கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை மரணம்
சமீப காலமாக கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு, திரையுல பிரபலங்கள் பலரும் மரணித்து வருகின்றனர். இந்த நோய் தொற்றால் ஒவ்வொரு நாளும் எத்தனையோ பேர் உயிர் நீத்து வரும் நிலையில், மக்களை மகிழ்வித்து வரும் திரைக் கலைஞர்களின் இறப்பு சற்று சோகத்தை ஏற்படுத்தத்தான் செய்கிறது. அந்த வகையில் பாலிவுட் சின்னத்திரையில் ‘அனுபமா’ என்ற சூப்பர் ஹிட் சீரியலில் நடித்து வந்த நடிகை மாதவி கோங்கடே தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணத்தை தழுவியுள்ளார்.
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகர் சரவண விக்ரமிற்கு கிடைத்த பாராட்டு – விஜே தீபிகா வாழ்த்து!
அதாவது தமிழ் சின்னத்திரையின் சூப்பர் ஹிட் சீரியலான் ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் ஹிந்தி தழுவல் ‘அனுபமா’ என்கிற சீரியலில் நடிகை ரூபாலிக்கு அத்தையாக நடித்து வருபவர் மாதவி கோங்கடே. தற்போது 58 வயதான நடிகை மாதவி கோங்கடே ஹிந்தி மற்றும் மராத்திய மொழிகளில் உருவான பல்வேறு சீரியல்களில் நடித்திருக்கிறார். மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வரும் இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கொரோனா தொற்று உறுதியானது.
மீண்டும் இணைந்த சன் டிவி ‘மெட்டி ஒலி’ குடும்பம் – வெளியான புகைப்படம்! ரசிகர்கள் நெகிழ்ச்சி!
இதையடுத்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் இன்று (நவ.22) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் ஹிந்தி சின்னத்திரை உலகை சற்று அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இப்போது ‘அனுபமா’ தொடரில் நடிகை மாதவி கோகேட் உடன் நடித்து வந்த நடிகை ரூபாலி கங்குலி, சவிதா பிரபுனே, அல்பனா புச் ஆகியோர் சமூக வலைதளங்கள் மூலமாக அன்னாருக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.