செப்.14 வரை பள்ளிகளை மூட உத்தரவு, ஆன்லைனில் தேர்வு – மாநில அரசு அறிவிப்பு!
கொரோனா நோய்த்தொற்று நிலவரத்தை கருத்தில் கொண்டு செப்டம்பர் 14ம் தேதி வரை பள்ளிகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் தேர்வுகளை ஆன்லைன் வாயிலாக நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகள் மூடல்:
நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று தீவிரமாக பரவி வந்ததை அடுத்து மாநில வாரியாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் எடுக்கப்பட்டது. 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் தினசரி 4 லட்சம் வரை பதிவாகி வந்த கொரோனா உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை தற்போது 40 ஆயிரமாக குறைந்து உள்ளது. எனவே கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டு மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.
தமிழகத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் – ‘இந்த’ அறிகுறிகள் இருந்தால்!
இதனையடுத்து படிப்படியாக கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் சில மாநில அரசுகள் 3வது அலை தடுப்பு நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள் திறக்கும் முடிவை ஒத்திவைத்து உள்ளன. அந்த வகையில் ஹிமாச்சல் பிரதேச மாநில அரசு வருகிற செப்.14ம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Tokyo Paralympics – இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம்! கிருஷ்ணா நாகர் வெற்றி!
இதனால், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தேர்வுகள் மாநிலத்தில் ஆன்லைனில் நடத்தப்படும். முன்னதாக செப்டம்பர் 4, 2021 வரை பள்ளிகளை மூட அரசு முடிவு செய்தது. தற்போது அது நீட்டிக்கப்பட்டு உள்ளது. மாணவர்களுக்கு பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் போது, கற்பித்தல் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் இந்த காலகட்டத்தில் பள்ளிக்கு வரலாம். கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என கூறப்பட்டு உள்ளது.