மே 1ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மூடல் – மாநில அரசு உத்தரவு!!
கொரோனா பாதிப்பு:
கொரோனா தொற்று நாடு முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பரவி வருகிறது. முதல் அலை கடந்த ஆண்டு இறுதியில் குறைந்து வந்த நிலையில், மக்கள் தங்கள் இயல்பு நிலைக்கு மெல்ல திரும்ப தொடங்கினார்கள். ஆனால் மீண்டும் 2021 மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை நாடு முழுவதும் அதிவேகத்தில் பரவி வருகிறது. இதனால் பல மாநிலங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
நெடுஞ்சாலை துறை கணக்காளர் பணி தேர்வு முறைகேடு – நீதிமன்றம் புதிய உத்தரவு!!
தேர்வுகள் ஒத்திவைப்பு:
நாடு முழுவதும் உள்ள கல்வி வாரியங்கள் தேர்வுகளை தள்ளிவைத்து வரும் சூழலில், இமாசலப் பிரதேச கல்வி வாரியம் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை தள்ளி வைத்து அறிவித்துள்ளது. தேர்வுக்கான புதிய தேதிகள் ஏதும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வரும் மே 1ம் தேதி முதல் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக ஏப்ரல் 21ம் தேதி வரை மட்டுமே பள்ளி, கல்லூரிகள் மூடப்படுவதாக அறிவித்திருந்த நிலையில் அரசு இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்று காரணத்தை ஒட்டி சிபிஎஸ்இ கல்வி வாரியம் தேர்வுகளை தள்ளிவைப்பதாக அறிவித்த பின்னர் தார் இமாச்சல அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் உள்ள கல்லூரி, பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் தள்ளி வைக்கப்படுவதாகவும் அரசு அறிவித்துள்ளது. தள்ளிவைக்கப்ட்ட தேர்வுகள் கொரோனா பரவல் குறைந்த பின்னர் மே அல்லது ஜூன் மாதத்தில் அனைத்து தேர்வுகளும் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்