ஏப்ரல் 21 வரை பள்ளிகளுக்கு விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!!

0
ஏப்ரல் 21 வரை பள்ளிகளுக்கு விடுமுறை - மாநில அரசு அறிவிப்பு!!
ஏப்ரல் 21 வரை பள்ளிகளுக்கு விடுமுறை - மாநில அரசு அறிவிப்பு!!
ஏப்ரல் 21 வரை பள்ளிகளுக்கு விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!!

கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து பல மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக இமாச்சல் பிரதேசத்தில் ஏப்ரல் 21 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இதனால் அந்தந்த மாநில அரசு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி கொரோனா அதிகம் பரவியுள்ள மத்திய பிரதேஷ், மஹாராஷ்டிரா, உத்திர பிரதேஷ் உட்பட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதே போல பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இமாச்சல் பிரதேசத்தில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து இமாச்சல் பிரதேசத்தில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் ஏப்ரல் 14 முதல் தடுப்பூசி திருவிழா – தலைமை செயலர் அறிவிப்பு!!

அதில் ஏப்ரல் 21 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஏப்ரல் 15 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக இமாச்சல் பிரதேச அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இமாச்சல பிரதேசத்தில் ஏப்ரல் 21ஆம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடப்படும். தவிர நர்சிங் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் வழக்கம் போல செயல்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!