ஜூலை 1 முதல் பேருந்துகள் இயக்கம், இ-பாஸ் முறை ரத்து – மாநில அரசு அறிவிப்பு!
கொரோனா பரவல் நிலவரத்தை கருத்தில் கொண்டு இமாச்சல பிரதேச மாநில அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகளை அறிவித்து உள்ளது. அதன்படி ஜூலை 1ம் தேதி முதல் பேருந்துகள் இயக்கம், கோவில்கள் பக்தர்கள் தரிசனத்திற்காக திறப்பு உள்ளிட்டவற்றிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்:
இமாச்சல பிரதேச மாநில அரசு அறிவித்துள்ள ஊரடங்கு தளர்வுகளின் படி, மாநிலத்திற்குள் நுழைவதற்கான இ-பாஸ் முறையை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. ஜூலை 1 முதல் 50 சதவீத திறன் கொண்ட வால்வோஸ் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இடையேயான பேருந்துகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், கோவிட்-19 நிலைமையை மறுஆய்வு செய்து இந்த தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
ஆதார் கார்டு முகவரியை ஆன்லைனில் மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள்!
ஜூலை 1 முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக மத வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதிக்கப்படுகின்றன. முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி மற்றும் கிருமிநாசினி பயன்படுத்துதல் உள்ளிட்ட விதிமுறைகளை முறையாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
- அரசாங்க அலுவலகங்கள் ஜூலை 1 முதல் 100% ஊழியர்களுடன் செயல்படத் தொடங்கும்.
- அனைத்து கடைகளும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும் என்றும், உணவகங்கள் இரவு 10 மணி வரை திறக்க அனுமதிக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
- சமூக கூட்டங்கள் மொத்த உட்புற திறனில் 50 சதவீதம் வரை அதிகபட்சம் 50 நபர்களுடன் அனுமதிக்கப்படும், அதே நேரத்தில் வெளிப்புற கூட்டங்களில் அதிகபட்சம் 100 நபர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
- 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை மூன்றாம் வாரத்திற்குள் அறிவிக்கப்படும். அதற்கான மதிப்பீடு முறையும் வெளியிடப்பட்டு உள்ளது.
- கோடைக்காலம் நிறைவு பகுதிகளில் ஜூன் 26 முதல் ஜூலை 25 வரை பள்ளிகளுக்கு ஒரு மாத விடுமுறை வழங்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.