மாநில அரசு ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு – அலுவலகத்திற்கு வருவது கட்டாயம்!
ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கொரோனா, ஓமைக்ரான் பாதிப்பு குறைந்து வருவதால் , நாளை ( 17 ஆம் தேதி) முதல் கர்ப்பிணி மற்றும் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு வருகை தர வேண்டும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
மாநில அரசு உத்தரவு:
இந்தியா முழுவதும் கடந்த மாதம் கொரோனா 3 வது அலை பாதிப்பு அதிக உச்சத்தை தொட்ட நிலையில் மத்திய – மாநில அரசுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியது. மீண்டும் இரவு ஊரடங்கு, பள்ளி கல்லூரிகள் விடுமுறை, அனைத்து துறை 50% ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி போன்ற கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாக மத்திய – மாநில அரசு ஊழியர்கள் 50% வீட்டில் இருந்து வேலை செய்ய அந்தந்த மாநில அரசு அனுமதி வழங்கியது.
TNPSC தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – தவறாமல் படிங்க!
மேலும் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தவறாமல் நடைபெற்று வருகிறது மற்றும் மாஸ்க் அணிதல் சமூக இடைவெளி ஆகியவை கட்டாயம் ஆக்கப்பட்டது. இதன் பயனாக கொரோனா தாக்கம் சற்று ஓய்ந்து வருவதால், ஊரடங்கு கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அரசு ஊழியர்கள் அனைவரும் தவறாமல் தினமும் அலுவலகங்களுக்கு வர வேண்டும் என, மத்திய – மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்து உள்ளன`
தமிழகத்தில் பிப்.19ம் தேதி பொது விடுமுறை – எங்கெங்கு தெரியுமா? முழு விபரங்கள் இதோ!
இந்த வகையில் ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து உள்ள நிலையில் கர்ப்பிணி மற்றும் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள், நாளை( 17 ஆம் தேதி) முதல் அலுவலகத்திற்கு வருகை தர வேண்டும் என மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி அனைத்து கல்வி நிறுவனங்களும் நாளை முதல் மீண்டும் திறக்க அனுமதி மற்றும் வணிக வளாகங்கள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள், செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.